வாய் துர்நாற்றம் குணமாக

 எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 நிமிடம் கழித்து விழுங்க வேண்டும். காலை, மாலை தொடர்ந்து 7 நாட்கள் செய்துவர சரியாகும்.

கரிசலாங்கன்னி, முசுமுசுக்கை, முருங்கைக்கீரை இவற்றில் தினம் ஒன்றாக பருப்புடன் கூட்டு செய்து மதிய உணவுடன் உண்டு வர வேண்டும். அத்துடன் தினம் ஒரு மாதுளம் பழமும் சாப்பிட்டு வர வேண்டும். ஒரு வாரம் சாப்பிட்டு வர துர்நாற்றம் விலகும்.

இரண்டு எலுமிச்சை அளவு புதினா இலைகளைச் சுத்தம் செய்து அதில் 2 ஏலக்காயை நசுக்கி சேர்த்து ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் நீர் விட்டு இலைகளையும் ஏலக்காய்த் தூளையும் போட்டுக்காய்ச்சி ஒரு டம்ளராக சுண்டியதும் இறக்கி ஆறியதும் வடிகட்டி இரண்டு பங்காக்கி காலை 8 மணிக்கும், மதியம் 2 மணிக்கும் வாயில் ஊற்றி 3,4 முறை கொப்பளித்து உமிழ வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் செய்ய துர்நாற்றம் சரியாகும்.

ஒரு அங்குல நீளமுள்ள வசம்பை இடித்துத் தூளாக்கி தூளை வாயில்போட்டு சாரத்தை கொஞ்சங் கொஞ்சமாக சப்பி விழுங்க வேண்டும். 15 நிமிடம் கழித்து சக்கையை துப்பிவிட வேண்டும். இவ்விதம் காலை, மாலை 3 நாட்கள் செய்ய நிவாரணம் பெறலாம்.

பத்து எலுமிச்சைத் தோல்களை வெய்யிலில் நன்கு உலர்த்தி இடித்து மாச்சல்லடையில் சலித்து 8 ஸ்பூன் தூளுக்கு 1 ஸ்பூன் உப்புத்தூள் கலக்கி ஒரு பாட்டலில் இருப்பு வைத்து தினமும் காலையில் ஒரு ஸ்பூன் தூளை எடுத்து ¼ ஸ்பூன் நல்லெண்ணெயில் குழப்பி அதை பல்துலக்கி 4,5 முறைக் கொப்பளித்து உமிழ வேண்டும். தொடர்ந்து ஒரு வாரம் இச்சிகிச்சையை செய்ய வேண்டும். வாய் நாற்றம் அகலும் வரை விளக்கிவர வேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உ ...

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி! பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீட ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவா ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்ற ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல் : பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டில்லியில் நேற்று நடந்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிற ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம் – இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் உறுதி ''இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...