வாய் துர்நாற்றம் குணமாக

 எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 நிமிடம் கழித்து விழுங்க வேண்டும். காலை, மாலை தொடர்ந்து 7 நாட்கள் செய்துவர சரியாகும்.

கரிசலாங்கன்னி, முசுமுசுக்கை, முருங்கைக்கீரை இவற்றில் தினம் ஒன்றாக பருப்புடன் கூட்டு செய்து மதிய உணவுடன் உண்டு வர வேண்டும். அத்துடன் தினம் ஒரு மாதுளம் பழமும் சாப்பிட்டு வர வேண்டும். ஒரு வாரம் சாப்பிட்டு வர துர்நாற்றம் விலகும்.

இரண்டு எலுமிச்சை அளவு புதினா இலைகளைச் சுத்தம் செய்து அதில் 2 ஏலக்காயை நசுக்கி சேர்த்து ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் நீர் விட்டு இலைகளையும் ஏலக்காய்த் தூளையும் போட்டுக்காய்ச்சி ஒரு டம்ளராக சுண்டியதும் இறக்கி ஆறியதும் வடிகட்டி இரண்டு பங்காக்கி காலை 8 மணிக்கும், மதியம் 2 மணிக்கும் வாயில் ஊற்றி 3,4 முறை கொப்பளித்து உமிழ வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் செய்ய துர்நாற்றம் சரியாகும்.

ஒரு அங்குல நீளமுள்ள வசம்பை இடித்துத் தூளாக்கி தூளை வாயில்போட்டு சாரத்தை கொஞ்சங் கொஞ்சமாக சப்பி விழுங்க வேண்டும். 15 நிமிடம் கழித்து சக்கையை துப்பிவிட வேண்டும். இவ்விதம் காலை, மாலை 3 நாட்கள் செய்ய நிவாரணம் பெறலாம்.

பத்து எலுமிச்சைத் தோல்களை வெய்யிலில் நன்கு உலர்த்தி இடித்து மாச்சல்லடையில் சலித்து 8 ஸ்பூன் தூளுக்கு 1 ஸ்பூன் உப்புத்தூள் கலக்கி ஒரு பாட்டலில் இருப்பு வைத்து தினமும் காலையில் ஒரு ஸ்பூன் தூளை எடுத்து ¼ ஸ்பூன் நல்லெண்ணெயில் குழப்பி அதை பல்துலக்கி 4,5 முறைக் கொப்பளித்து உமிழ வேண்டும். தொடர்ந்து ஒரு வாரம் இச்சிகிச்சையை செய்ய வேண்டும். வாய் நாற்றம் அகலும் வரை விளக்கிவர வேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...