சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று கூற எவருக்கும் உரிமை இல்லை – அமித்ஷா

வக்ப் என்பது, முஸ்லிம்கள் தங்களுடைய சொந்த சொத்துகளை, மதம் தொடர்பான நல்ல பயன்பாட்டுக்கு தானமாக வழங்குவது. ஆனால், மற்றவர்கள் சொத்துக்களை பறித்துக் கொள்வது வக்ப் சொத்தாக முடியாது.

பல மாநிலங்களில், கோவில் நிலங்கள், கிராமங்கள் என, அனைத்தையும் வக்ப் சொத்தாக மாற்றியுள்ளனர். அரசு நிலங்களை வக்ப் சொத்தாக அபகரித்துள்ளனர். அரசு நிலங்கள், கிராமங்களில் பொதுப் பயன்பாட்டுக்கான நிலங்கள் அனைவருக்குமானது. அதற்கு வக்ப் வாரியங்கள் உரிமை கோர முடியாது. அதை மோடி அரசு அனுமதிக்காது.

வக்ப் என்பது ஏழை முஸ்லிம்களின் நலனுக்கானது. திருடுவதற்காக அல்ல. இந்த மசோதா அந்த திருட்டை நிறுத்தும்; மசோதா சொத்துகளை பாதுகாக்கும். தொல்லியல் துறை சொத்துகள், பழங்குடியினர் நிலம், தனியார் நிலம் போல, வக்ப் சொத்துகளை பாதுகாப்பதே இந்த மசோதாவின் நோக்கம்.

தனிநபர்கள், தங்களுக்கு சொந்தமான நிலத்தை மட்டுமே வக்புக்கு நன்கொடையாக வழங்க முடியும். மற்றவர்கள் நிலத்தையோ, அரசு நிலத்தையோ, வக்ப் சொத்தாக அறிவிக்க முடியாது.

இந்த மசோதா குறித்து தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்புகின்றன. ஆனால், இந்த அரசு அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லுமே தவிர, ஓட்டு வங்கி அரசியல் செய்ய மாட்டோம்.

வக்ப் வாரியம் என்பது மத அமைப்பு அல்ல, அது ஒரு நிர்வாக அமைப்பு. அதில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்காகவே இந்த திருத்தம் செய்யப்படுகிறது. மசோதா முன்தேதியிட்டு அமல்படுத்தப்படாது.

வக்பு சொத்துகள் தொடர்பான பதிவுகளுக்கு, கலெக்டர்களே பொறுப்பாளராக இருப்பர் என்பதில் என்ன தவறு உள்ளது. எது அரசு நிலம், எது தனியார் நிலம் என்பதை நிர்வகிப்பது கலெக்டர்களே. வழிபாட்டு தலங்கள் கட்டலாம். ஆனால், அரசு நிலத்தில் எப்படி கட்ட முடியும். அதனால், கலெக்டர்களே பொறுப்பாளர்களாக இருப்பர்.

இந்த மசோதா, பல தரப்பினருடன் ஆலோசிக்கப்பட்டு, பலருடைய கருத்துக்கள் கேட்கப்பட்டு, நீண்ட விவாதங்களுக்குப் பிறகே தயாரிக்கப்பட்டுள்ளது. யாருடைய உருட்டல், மிரட்டல்களுக்கு பயந்தோ, அவர்களுடைய ஆதரவு தேவை என்றோ, ஓட்டு வங்கிக்காகவோ இந்த மசோதா தயாரிக்கப்படவில்லை.

நீங்கள் மக்களை ஓட்டுகளாக பார்க்கிறீர்கள். நாங்கள் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பார்க்கிறோம். இந்த மசோதா சட்டமானால், அதை சிறுபான்மையினர் ஏற்க மாட்டார்கள் என ஒரு எம்.பி., கூறினார்.

எந்த சட்டமாக இருந்தாலும், அது அனைத்து மக்களையும் கட்டுப்படுத்தும். பார்லிமென்டால் நிறைவேற்றப்படும் சட்டத்தை ஏற்க மாட்டோம் என்று எவரும் கூற முடியாது.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு� ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச� ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...