நரேந்திர மோடியின் அழைப்பை வரிசையாக ஏற்கும் சார்க் நாடுகள்

கொரோனா வைரஸை எதிர் கொள்ள வலிமையான  செயல் திட்டம் வகுக்க சார்க் நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்பதாக பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது.

உலகநாடுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போராடிவருகின்றன. இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளிலும் வெளிநாட்டில் இருந்துவந்தவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவிவருகிறது.

இந்நிலையில் 8 தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் (SAARC) நாடுகளின் தலைவர்கள் கொரோனாவை எதிர் கொள்ள வலிமையான செயல்திட்டத்தை ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும். அதுகுறித்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த சார்க்நாடுகள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று டுவிட்டரில் அழைப்பு விடுத்திருந்தார்.

அவர் அழைப்பு விடுத்த சிலமணி நேரங்களில் இலங்கை மற்றும் மாலத்தீவு  அழைப்பை ஏற்பதாக அறிவித்தன.அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசும் வீடியோ கான்பிரஸ் மூலமாக கொரோனா குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்பதாக இன்று அறிவித்துள்ளது.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஆயிஷா ஃபரூக்கி

‘கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சார்க்நாடுகளுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசிக்க பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு சுகாதாரத்துறை செயலாளர் ஜஃபார் மிர்ஸா தயாராக உள்ளார் என ஆயிஷா ஃபரூக்கி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இதுவரை 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...