கொரோனாவை தடுத்து நமது வலிமையை நிருபிப்போம்

கொரோனா இந்தியாவை தாக்காது என்பது தவறு.இதனைதடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு தேவை.மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம். மக்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தே வேலைசெய்ய வேண்டும். கொரேனா வைரஸ் நம்மை ஒன்றும்செய்யாது என எண்ண வேண்டாம். கொரோனாவை தடுத்து நமது வலிமையை நிருபிப்போம். மக்களுக்காக , மக்களே சுயமாக ஊரடங்கு நடை முறையை பின்பற்றுவோம்.

22 ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டின் முன்னால் அத்தியாவசிய சேவை செய்வோருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும். கொரோனா வைரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் அன்று இந்தியாவின் சோதனை ஓட்டமாக இருக்கும். அத்தியாவசிய பொருட்களை வாங்கிகுவிக்க வேண்டாம்.தேவையின்றி மருத்துவமனைகளில் குவியாமல் பதற்றத்தை தவிர்க்கவேண்டும். மக்கள் விழிப்புடன் எதிர்கொள்ள வேண்டும். அலட்சியம் கூடாது.கொரோனா வரைஸ் காரணமாக ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது.மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது மிகமுக்கியம்.

கடந்த இரண்டு மாதங்களாக பெரும் கவலையோடு உலகம் முழுக்க இதுபரவி வருவதை நாம் பார்த்துவருகிறோம். உலகம் தற்போது மிகப்பெரிய சிக்கலை கடந்து கொண்டு இருக்கிறது. முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப் போரை விடவும் அதிகப்படியான நாடுகள் இந்த வைரஸால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

ஒரு வைரஸ் காரணமாக இத்தனை நாடுகள் பாதிக்கப்படுவது என்பது முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு இந்தியனும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டிய காலகட்டம் இது. எப்போதெல்லாம் இயற்கை பேரிடர் வருகிறதோ, அப்போதெல்லாம் ஒருகுறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும்தான் அதுபாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீது வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 130 கோடி பேரும் கொரோனாவுக்கு எதிரானபோரை முன்னெடுக்க வர வேண்டும். சோசியல் டிஸ்டன்ஸ் என்கிற சமூக இடைவெளியை நாம் கடைபிடிக்க வேண்டியது கட்டாயம்.

அத்தியாவசிய சேவையை செய்பவர்கள் தவிர மற்றவர்கள் யாரும் ஞாயிற்றுகிழமை வெளியே வரவேண்டாம். மருத்துவர்கள் ஊடகத்துறையினர் போக்குவரத்து துறையினருக்கு மற்றவர்கள் தொந்தரவு தரவேண்டாம். நோய்க்கு ஆளாகாதீர்கள் .நோய்களை பரப்பாதீர்கள் . பொருளாதார மந்தநிலையை போக்குவதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் ஆலோசனைகுழு அமைக்கப் பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு கைதட்டல் மூலம் நன்றி கூறுங்கள்.

கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...