அமெரிக்காவில் 50 மாகாணங்களும் பேரழிவுப் பகுதிகளென அறிவிப்பு!

கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கும் அமெரிக்காவில் வியோமிங் மாகாணத்தையும் பேரழிவுப்பகுதியாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பதன் மூலம், அந்நாட்டின் 50 மாகாணங்களும் பேரழிவுப்பகுதியாக அறிவிக்கபட்டுள்ளது.

உலகளவில் 18 லட்சம் பேரை கரோனா தொற்று பாதித்துள்ளது. இது வரை 11 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் இது வரை 5 லட்சத்து 60 ஆயிரம்பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது. பலி எண்ணிக்கை 22 ஆயிரத்தை தொட்டு விட்டது.

கரோனா தொற்றால் உலகிலேயே மிகவும் பாதிக்கபட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. பாதிப்பிலும், உயிர்பலியிலும் அமெரிக்காவே முதல்இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் கரோனாதொற்று பாதித்து உயிரிழப் பவர்களின் எண்ணிக்கை ஐந்து நாள்களுக்கு ஒருமுறை இரட்டிப்பு ஆகிறது. அதாவது ஐந்து நாட்களுக்கு முன்பு 10 ஆயிரமாக இருந்தபலி எண்ணிக்கை, தற்போது 20 ஆயிரத்தை எட்டிவிட்டது.

இந்நிலையில், கரோனா தொற்று அதிகமாக பாதிக்கப்பட்ட நியூயார்க் மாகாணத்தில் முதல் முறையாக பேரழிவு மாகாணமாக அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து ஒவ்வொரு மாகாணங்களாக பேரழிவு மாகாணங்கள் பட்டியலில்சேர்ந்தன. கடைசியாக வியோங் மாகாணத்தையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேரழிவு மாகாணமாக அறிவித்ததை அடுத்து, அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக அனைத்து 50 மாகாணங்களும் பேரழிவு மாகாணங்களாக அறிவிக்கபட்டுள்ளன.

அமெரிக்காவில் இயற்கை பேரழிவுகளின்போதும், பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் போதும், ஒருசில மாகாணங்கள் மட்டுமே பேரழிவுப்பகுதியாக அறிவிக்கப்பட்டது உண்டு. ஆனால், இது தான் முதல் முறை, 50 மாணாங்களும் பேரழிவு மாகாணங்களாக அறிவிக்க பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக அனைத்து மாகாணங்களும் அதிபரின் பேரழிவுப் பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளது. கண்ணுக்கு தெரியாத எதிரியுடனான போரில் நாம் வென்றுவருகிறோம். விரைவில் முழுவதும் வெற்றிபெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...