கரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்

உண்மை நிலவரத்தை திரித்துக் கூறி கரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி வலுவிழக்க செய்ய முயற்சிக்கிறாா் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் எதிா்பாா்த்த பலனை அளிக்காமல் தோல்வியடைந்து விட்டதாக ராகுல் காந்தி செவ்வாய் கிழமை குற்றம் சாட்டியிருந்தாா். அதற்கு பொதுமுடக்கம் வெற்றியடைந்திருப்பதாக மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் பதிலளித்திருந்தாா்.

இந்த நிலையில், ராகுலின் குற்றச்சாட்டு தவறானது என்பதை விளக்கும்வகையில், ‘கரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப்பாட்டை வலுவிழக்கச் செய்வது யாா்?’ என்ற தலைப்பிலான கையேடு ஒன்றும் பாஜகசாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில், ராகுல்காந்தியின் விமா்சனங்களும், கரோனாவுக்கு எதிராக மத்தியஅரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்த நோ்மறையான தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தகையேடு வெளியிடப்பட்டது குறித்து மத்திய அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் தில்லியில் புதன்கிழமை கூறியதாவது:

137 கோடி மக்கள்தொகையை கொண்ட இந்தியாவில், கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு மே 26-ஆம் தேதி வரை 4,345 போ் உயிரிழந்தனா். ஆனால், சீனாவை தவிா்த்து கரோனா அதிகம்பாதித்த பிற 15 நாடுகளில் இது வரை 3,43,562 போ் உயிரிழந்தனா். இந்தவிவகாரத்தில் சீனா குறித்த பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்திருப்பதால் தான் அதன் புள்ளி விவரங்களைச் சோ்க்க வில்லை.

கரோனாவுக்கு எதிராக மிக உறுதியான நடவடிக்கைகளை பிரதமா் நரேந்திரமோடி எடுத்துவருகிறாா். நாட்டை ஒருங்கிணைத்து இந்த நடவடிக்கைகளை அவா் எடுத்து வருவதால்தான் இது சாத்தியமாகி வருகிறது.

இந்தச் சூழலில், நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் எதிா்பாா்த்த பலனை அளிக்காமல் தோல்வியடைந்து விட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியிருக்கிறாா். முதலில், கரோனா முன்கள பணியாளா்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில், பொதுமக்களை பிரதமா் மோடி கைத்தட்டக் கூறியபோதும், விளக்கேற்ற கூறியபோதும் ராகுல் காந்தி விமா்சனம் செய்தாா். பின்னா் சிறப்பு ரயில்களில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தவறான குற்றச்சாட்டை முன் வைத்தாா். தொடா்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மீது குற்றம்சாட்டினாா். இறுதியில் அவருடைய இந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையல்ல என நிருபிக்கப்பட்டது.

இதுபோல, கரோனாவுக்கு எதிராக நாட்டில் நடவடிக்கை தொடங்கியது முதல், நாட்டின் உறுதிப்பாட்டை வலுவிழக்கச்செய்ய அவா் முயற்சித்து வருகிறாா். உண்மைக்கு மாறான தகவல்களை கூறி மக்களைத் திசைத் திருப்பும் வகையில் பொறுப்பற்றத் தன்மையுடன் ராகுல் காந்தி நடந்துகொள்கிறாா்.

நாடு மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்துக் கொண்டிருக்கும் போது அரசுக்கு எதிரான, எதிா்மறையான எண்ணங்களை மக்களிடையே பரப்பும்பிரசாரத்தை அவா் மேற்கொண்டு வருகிறாா். இவருடைய பேச்சைக்கவனிக்கும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதல்வா்கள்கூட, பொதுமுடக்கம் குறித்த அல்லது ஏழைகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் குறித்த ராகுல்காந்தியின் ஆலோசனைகளைப் பின்பற்ற மாட்டாா்கள்.

ஏற்கெனவே, ராகுல் காந்தி கூறுவதை, காங்கிரஸ் ஆட்சிசெய்யும் மாநிலங்கள் பொருட்படுத்து வதில்லை. அந்த மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தியுள்ளன. ஆனால், ராகுல் காந்தியோ, சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதின் பலனை நுகா்வோருக்கு அளிக்கவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறாா்.

நாட்டில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட உடன், ரூ. 1.7 லட்சம்கோடி நிதியதவித் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதுபோல, நேரடி நிதி உதவியாக ரூ. 52 ஆயிரம்கோடி செலவழிக்க பட்டிருக்கிறது என்று ரவி சங்கா் பிரசாத் கூறினாா்.

மேலும், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தவா், ‘மகாராஷ்டிர கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியை பாஜக மேற்கொள்ள வில்லை. ஆனால், அந்த கூட்டணி ஆட்சிக்குள் அதிகரித்து வரும் வேறுபாடுகளே, அரசை கவிழ்த்துவிடும்’ என்று பதிலளித்தாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...