நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

 நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும்.

ஒருவருக்கு அதிக தாகம்… அதிக பசி… அதிக சோர்வு… அதிகமாகச் சிறுநீர் போதல்… அதிக உடல் பருமன்… இருப்பின் அவருக்கு நீரிழிவு நோய் இருக்க வாய்ப்புண்டு. எனவே, அவர் தமது இரத்தத்தில் (உடலில்) சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொள்ள உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

'நீரிழிவு நோய் விழிப்புணர்வில்' இச் செய்தியே முதல் விழிப்புணர்வுச் செய்தி. இதனை அனைவருக்கும் கூறி நீரிழிவு நோய் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தொற்றுநோய்க்குத் தடுப்பூசி உண்டு (Communicable Disease Immunisation)

காசநோயக்குத் தடுப்பூசி பி.சி.ஜி (B.C.G. Vaccination) என்று உண்டு.

இளம்பிள்ளைவாதம் என்று சொல்லப்படும் போலியோ நோய்க்குத் தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து (Polio Drops)என்று உண்டு.

ஆனால் பாரவாத நோய்கள் எனப்படும் (Non – Communicable Disease) நீரிழிவுநோய்க்குத் தடுப்பூசி எதுவும் இல்லை.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் போட்டு கொள்ளும் 'இன்சுலின் ஊசி' என்பது, நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மட்டுமே உதவும்; இந்நோயைக் குணப்படுத்தாது.

நீரிழிவுநோய் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது.

மருத்துவச் செலவின்றி நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். அதற்கு,

1. நீரிழிவுநோய் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படைச் செய்திகளை அறிந்துகொள்ள வேண்டும்.
2. சரியான, அளவான உணவுமுரைப் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
3. அவசியமான உடற்பயிற்சிகள் செய்து வர வேண்டும்.
4. மனப்பதட்டதைப் போக்க யோகாசனம், தியானம் போன்றப் பயிற்சிகளைச் செய்து வர வேண்டும்.

ஆரம்ப நிலையிலேயே நீரிழிவுநோயை அறிந்து கொண்டு செயல்பட்டால், அடுத்தடுத்துஏஎற்படக்கூடிய பாதிப்புகள் வராமல் காத்துக் கொள்ள முடியும். எனவே நீரிழிவுநோய் உள்ளவைகள்.

கண் பாதுகாப்பு, இதய நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது, சிறுநீரகப் பாதுகாப்பு, கால்கள் பாதுகாப்பு போன்றன குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.