பாதுகாப்புத் துறை குழுவில் பங்கேற்காத ராகுல் கேள்வி எழுப்பலாமா?

பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்றக் குழுவில் ஒரு முறைகூட ராகுல் காந்தி பங்கேற்காத நிலையில், ராணுவத்தின் வீரம்குறித்து கேள்வி எழுப்பி, தேசத்தை சோர்வடையச் செய்கிறார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா சாடியுள்ளார்.

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவவீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தவிவகாரத்தில் ராகுல் காந்தி மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டு கூறிவருகிறார். இதற்கு பதிலடியாகவே பாஜக தேசியத்தலைவர் ஜெ.பி. நட்டா, டுவிட்டரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை கடுமையாகச் சாடி கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அதில் ‘ ராகுல் காந்தி இதுவரை பாதுகாப்புத் துறைக்கான நடாாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் ஒரு முறைகூட பங்கேற்றது இல்லை. ஆனால், சொல்லவே வருத்தமாக இருக்கிறது, தொடர்ந்து நமது ராணுவவீரர்களின் வீரத்தைப் பற்றி கேள்வி எழுப்பி, தேசத்தை மனச்சோர்வுக் குள்ளாக்குகிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் இது போன்று செய்யமாட்டார்.

ராகுல்காந்தி புனிதமான அரச பரம்பரையில் வந்தவர். பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை குழுக்களில் பங்கேற்பதெல்லாம் பெரியவிஷயம் அல்ல, உத்தரவிட மட்டுமே செய்கின்றன. நாடாளுமன்ற விவகாரங்களைப் புரிந்துகொள்ள தகுதியான பலஉறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். ஆனால் அந்தவாரிசுக் குடும்பம் அத்தகைய தலைவர்களை ஒரு போதும் வளரவிட்டது இல்லை. உண்மையாகவே இதுவேதனை’ எனத் தெரிவித்துள்ளார்.

நட்டாவின் குற்றச்சாட்டுக்கு இன்னும் காங்கிரஸ் கட்சியிலிருந்து எந்த வித பதிலும் வரவில்லை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...