நாட்டின் பொருளாதாரத்தை மீட்க உயர் அதிகாரிகளிடம் கருத்துகளை கேட்ட மோடி

நிதி அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகத்தைச்சேர்ந்த உயர் அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திரமோடி நேற்று மாலை ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது கரோனா வைரஸ்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது தொடர்பாக அவர்களின் ஆலோசனைகளை அவர் கேட்டறிந்தார். பொருளாதாரத்தை விரைவாகமீட்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். அதற்குத் தேவையான கருத்துகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்ற இந்தஆலோசனைக் கூட்டம் ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் நீடித்தது. நிதி அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தற்போதைய சூழலை எதிர் கொள்வது தொடர்பாக விரிவான அறிக்கைகளை பிரதமருக்கு எடுத்து காட்டியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக பொருளாதார ஆலோசனை கவுன்சில், நிதித் துறை முதன்மை பொருளாதார செயலர், நிதிஆயோக் ஆலோசகர் ஆகியோருடன் 3 தனித் தனி கூட்டங்களை நடத்தி ஆலோசனைகளைக் கேட்டறிந்துள்ளார் பிரதமர்.

கரோனா வைரஸ்பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, கடந்த மே மாதம் மத்தியஅரசு ரூ.20.97 லட்சம் கோடி மதிப்பிலான சலுகை அறிவிப்புகளை வெளியிட்டது. பொருளாதார மீட்சிக்காக இந்தஅறிவிப்புகள் வெளியிடப்பட்டு அவை படிப்படியாக செயல்படுத்தப் படுகின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...