இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி பைசாசம், பெருந்தும்பை என்ற பல பெயர்களில் வழங்கப்படுகிறது.
இதன் இலையைக் கசாயம் இட்டு கொடுக்க வாந்திபேதி, சீதிசுரம், கோரசுரம், முறைக்காய்ச்சல், இருமல்கள் குணப்படும்.
இக்கசாயத்தை பல் முளைக்கும் குழந்தைகளுக்குக் கொடுக்க அப்போது உண்டாகும் பேதி நிற்கும்.
கீழ் வாதங்களுக்கும் முழங்கால் மூட்டுவலிக்கும் மேலுக்கு ஒற்றிடமிடக் குணமாகும்.
இக்கஷாயத்தின் ஆவியை முகர்ந்தும், உள்ளுக்கும் கொடுக்க உடம்பில் வியர்வை உண்டாகும். விடாச்சுரம் நீங்கும்.
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.