அமித்ஷா இனி ஒவ்வொரு மாதமும் மேற்குவங்கம் வருவார்

அமித்ஷா இனி ஒவ்வொரு மாதமும் மேற்குவங்கம் வருகைதர உள்ளதாகவும் சட்டப்பேரவை தேர்தல்கள் முடியும்வரை தொண்டர்களை உற்சாகப்படுத்தப் போவதாகவும் மேற்குவங்க பாஜக தெரிவித்துள்ளது.

பல்வேறு மாநில இடைத்தேர்தல்களிலும் பிஹாரிலும் பாஜக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில் பாஜக அடுத்து வரும் தேர்தல்களை சந்திக்க மும்முரமாக செயல்பட்டுவருகிறது. மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டப் பேரவைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் பாஜக மாநிலத்தில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது.

இதுகுறித்து மேற்குவங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் புதன்கிழமை கூறியதாவது:

பாஜகவின் இருமூத்த தலைவர்கள் அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் தேர்தலுக்கு முன்னதாக இனி ஒவ்வொரு மாதமும் தனித் தனியாக மேற்கு வங்கத்திற்கு வருகை தருவார்கள். அவர்கள் இருவரும் கட்சிஅமைப்பு வேலைகளில் பங்கெடுத்துக் கொள்வார்கள். தேதிகள் இன்னும் இறுதி செய்யப்பட வில்லை.

அமித் ஷா ஒருமாதத்திற்கு தொடர்ச்சியாக இருதினங்களும், நட்டா மூன்று தினங்களும் சட்டப்பேரவை தேர்தல் முடியும்வரை மாநிலத்திற்கு வருகை தருவார்கள். அவர்களின் தொடர்ச்சியான வருகைகள் கட்சித்தொண்டர்களை உற்சாகப்படுத்தும்.

காங்கிரஸ் மற்றும் சிபிஐஎம் ஆகிய இருகட்சிகளும் நீண்ட காலமாக மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ், சிபிஎம் மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்கு வாய்ப்புகளை மேற்குவங்க மக்கள் வழங்கியுள்ளனர். ஆனால் மூன்று கட்சிகளும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஆட்சியைவழங்க தவறிவிட்டன, அவை இப்போது பாஜகவால் நிறைவேறும்.

இவ்வாறு திலீப் கோஷ் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...