2024 மக்களவைத் தேர்தல் பிரதமர் வேட்பாளர் மோடி

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்நிறுத்தப்படுவார். என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று முன்தினம் பாஜக தேசியசெயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் அமித்ஷா பேசும்போது, ‘‘2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்படுவார். அவரது தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம். கடந்த தேர்தலைவிட அதிக தொகுதிகளில் வெற்றிபெறுவோம்’’ என்று தெரிவித்தார். பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்துவது தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றபட்டது.

இதில் கலந்துகொண்ட பாஜக தேசியதலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது:
கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு பதவியேற்றது. அப்போது டெல்லியில் நடைபெற்ற பாஜக உயர்நிலை கூட்டத்தில் முக்கியமுடிவு எடுக்கப்பட்டது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுக்கு சொந்த அலுவலகம் அமைக்க திட்டமிடபட்டது.

இதற்காக 750 மாவட்டங்கள் தேர்வுசெய்யப்பட்டன. இதில் 250 மாவட்டங்களில் அலுவலகங்கள் திறக்கபட்டுள்ளன. 512 மாவட்டங்களில் பணிகள் நடைபெறுகின்றன. தற்போது பிஹாரில் 16 மாவட்டங்களில் பாஜக அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களில் புதிய அலுவலகம்கட்ட அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

பாஜகவின் கொள்கைகள் வலுவானவை. இதன்காரணமாக மாற்று கட்சிகளிடம் இருந்து பாஜகவில் இணைவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உ ...

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி! பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீட ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவா ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்ற ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல் : பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டில்லியில் நேற்று நடந்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிற ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம் – இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் உறுதி ''இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...