முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

 வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் கொண்டு கபம் சம்பந்தமான நோய்களுக்கு – குறிப்பாக ஆஷ்துமாவைக் குணப்படுத்த மருந்தைத் தேடி அலைய வேண்டாம். 'இளைப்பு இருமல்' என்று கூறப்படும் ஆஸ்துமாவை அடியோடு வேரறுக்க முசுமுசுக்கை, ஆடாதோடை போன்றவை நல்ல மருந்தாகும்.

இந்த இலைகளைப் பறித்து வந்து, இதனுடன் புதினா இலை, உளுந்து, கறிவேப்பிலை, இஞ்சி இவை சேர்த்து அரைத்த துவையலை வாரத்திற்கு மூன்று தினங்கள் முதல் சோற்றில் இட்டுச் சிறிது நல்லெண்ணையும் விட்டுச் சாப்பிட்டு வந்தால் கபத் தொல்லைகளை குறிப்பாக ஆஸ்துமாவை வேரறுக்கலாம்.

பெரும் சுவாசக் குழல், மற்றும் கிளை சுவாசக் குழல்கள், சுவாசப் பையின் நுண்ணறைகள் இங்கெல்லாம் ஏற்படுகின்ற அழற்சியைப் போக்க முசுமுசுக்கை பெரிதும் உதுவுகிறது. மேலும், சுவாசப்பைகளில் தேங்கிடும் கோழையை அகற்றித் துப்புரவு செய்வதில் இதற்கு இணை வேறு இல்லை எனலாம். நுரையீரல்களில் உண்டாகும் எந்த நோயையும் இது குணப்படுத்த வல்லதாகும்.

முசுமுசுக்கை வேர் ஏறக்குறைய 100 கிராம், ஆடாதோடை வேர் 50 கிராம், திப்பிலி 25 கிராம், மிளகு 20 கிராம் என்ற அளவில் எடுத்துக் காய வைத்து இடித்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி அளவு ஒவ்வொரு வேளைக்கும் இட்டுக் கொதிக்க வைத்துக் காலையிலும் மாலையிலும் குடித்து வர நாள்பட்ட சளியைக் கரைக்கலாம். காசநோயையும் குணப்படுத்தலாம்.

முசுமுசுக்கை தைலம் கண் எரிச்சல், உடற்சூடு இவைகளைத் தணிப்பதாகும். முசுமுசுக்கை இலைகளைக் கொண்டு வந்து இடித்து சாறெடுத்து அதே அளவு நல்லெண்ணையும், அதே அளவு பசும்பாலும் சேர்த்துக் காய்ச்சி எடுக்க வேண்டும். இதை அனைவரும் தேய்த்துப் பலன் பெறலாம்.

One response to “முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...