முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

 வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் கொண்டு கபம் சம்பந்தமான நோய்களுக்கு – குறிப்பாக ஆஷ்துமாவைக் குணப்படுத்த மருந்தைத் தேடி அலைய வேண்டாம். 'இளைப்பு இருமல்' என்று கூறப்படும் ஆஸ்துமாவை அடியோடு வேரறுக்க முசுமுசுக்கை, ஆடாதோடை போன்றவை நல்ல மருந்தாகும்.

இந்த இலைகளைப் பறித்து வந்து, இதனுடன் புதினா இலை, உளுந்து, கறிவேப்பிலை, இஞ்சி இவை சேர்த்து அரைத்த துவையலை வாரத்திற்கு மூன்று தினங்கள் முதல் சோற்றில் இட்டுச் சிறிது நல்லெண்ணையும் விட்டுச் சாப்பிட்டு வந்தால் கபத் தொல்லைகளை குறிப்பாக ஆஸ்துமாவை வேரறுக்கலாம்.

பெரும் சுவாசக் குழல், மற்றும் கிளை சுவாசக் குழல்கள், சுவாசப் பையின் நுண்ணறைகள் இங்கெல்லாம் ஏற்படுகின்ற அழற்சியைப் போக்க முசுமுசுக்கை பெரிதும் உதுவுகிறது. மேலும், சுவாசப்பைகளில் தேங்கிடும் கோழையை அகற்றித் துப்புரவு செய்வதில் இதற்கு இணை வேறு இல்லை எனலாம். நுரையீரல்களில் உண்டாகும் எந்த நோயையும் இது குணப்படுத்த வல்லதாகும்.

முசுமுசுக்கை வேர் ஏறக்குறைய 100 கிராம், ஆடாதோடை வேர் 50 கிராம், திப்பிலி 25 கிராம், மிளகு 20 கிராம் என்ற அளவில் எடுத்துக் காய வைத்து இடித்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி அளவு ஒவ்வொரு வேளைக்கும் இட்டுக் கொதிக்க வைத்துக் காலையிலும் மாலையிலும் குடித்து வர நாள்பட்ட சளியைக் கரைக்கலாம். காசநோயையும் குணப்படுத்தலாம்.

முசுமுசுக்கை தைலம் கண் எரிச்சல், உடற்சூடு இவைகளைத் தணிப்பதாகும். முசுமுசுக்கை இலைகளைக் கொண்டு வந்து இடித்து சாறெடுத்து அதே அளவு நல்லெண்ணையும், அதே அளவு பசும்பாலும் சேர்த்துக் காய்ச்சி எடுக்க வேண்டும். இதை அனைவரும் தேய்த்துப் பலன் பெறலாம்.

One response to “முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...