தமிழர்வாழ்வு உயரட்டும், தமிழகம் தரணியின் தலைமையேற்கட்டும்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ்சொந்தங்களுக்கும், எனது முதற்கண் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உழுதுண்டு வாழ்வாரேவாழ்வார் என்பதற்கேற்ப, இயற்கையை வணங்கி, விவசாயத்தில் பெரும்பங்குவகிக்கும் மாடுகள், விவசாய கருவிகள் என அனைத்திற்கும் நன்றி தெரிவித்து , அவைகளை கொண்டாடும் பண்புமிக்க பாரம்பரியம் நமது தமிழர் பாரம்பரியம். இது உலகில் வேறெங்கும் இல்லை.

இந்த உன்னதமான கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் போற்றி, பாதுகாத்து, வருகின்ற தலைமுறைகளிடம் ஒப்படைக்கவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. எட்டுத் திக்கும் தமிழின் மாண்பையும், தமிழ் கலாசாரத்தின் மேன்மையையும் பறைசாற்றிக் கொண்டிருக்கும், ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உற்ற நண்பன், நமது பாரதப்பிரதமர் மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில், அனைவரும் இணைந்து, அனைவருக்கும் வளர்ச்சி என பயணிக்கும் ஆட்சியில், தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அது மிகையல்ல.

தைத் திருநாளாம் பொங்கலில், தமிழ் செழிக்கட்டும், தமிழர்வாழ்வு உயரட்டும், தமிழகம் தரணியின் தலைமையேற்கட்டும். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும், எனது சார்பிலும் தமிழ்சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...