அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் சித்தர்கள் அறுகு என பெயரிட்டுள்ளனர்.

இடகலை, பிங்கலை நமது தச நாடிகளில் பிரதானமானது, அறுகம்புல் இவை இரண்டையும் மற்றும் இவை சார்ந்த 72000 நரம்புகளையும் இயக்கவல்லது.

அறுகம்புல்லின் ஊறல் நீரையும் , பாளையும் சேர்த்து உட்கொள்ள  கண் புகைச்சல், கண்நோய், குருதியழல், தலை நோய்  இவை நீங்கும் .

அறுகம்புல்லுடன் சிறிது அலவு மஞ்சள் சேர்த்து அரைத்து தடவி வந்தால் , படர்தாமரை சொறி,சிரஙகு நுண்புழு ஒழியும்.

அறுகம்கட்டை  கணு நீக்கி ஒரு பிடியெடுத்து அதனுடன் பதிமுன்று  மிளகு சேர்த்து இடித்து அரைப்படி நீர்விட்டு அரை அழக்காக சுண்டும் படி கஷாயம் இட்டு சாப்பிடவும். இப்படி காலை, மாலை இரண்டு வேளையும் பாத்து நாள் சாப்பிட்டால் மேகசுரம் , உடம்பு சூடு முதலியன நீங்கும்.

மாட்டு சாணியை உருண்டையா பிடித்து அதற்கு பொட்டு வைத்து அதன் தலையில்  அருகம்புல்லைச்செருகி வைத்தால் சில நாள் சென்று சாணி  சுக்கலாக காய்ந்து இருக்கும். இதற்கு காரணம்  அறுகம்புல்லின் வேர் பாகத்தில் இருக்கும் கிருமி நாசிணி சாணியில் இருக்கும் அசுத்த கிருமிகளை வேதியல் மாற்றத்தால் நீக்கி சுத்தப்படுத்துகிறது

இதையே மற்றொரு சாணியில் அறுகம்புல் செருகாமல் வைத்தால் அவற்றில் புழுபுழுத்து உதிர்ந்து காணப்படும். இவற்றில் இருந்து அறுகம்புல்லுக்கு எந்த அளவிற்கு மருத்துவ குணம் உண்டு என்பதை நாம் புரிந்த கொள்ள வேண்டும்.

அறுகம்புல்லின் கணு பாகம் நச்சு தன்மையுடையது எனவே இதை நீக்கிப் பயன படுத்த வேண்டும் என்பது மருத்துவ விதியாகும்.

 

Tag; arugampul medicinal  அறுகம்கட்டை  அறுகம்புல்  அறுகம்புல் இராஜ மூலிகையாகும்  அறுகம்புல் நோய்களை வேருடன்  அறுகம்புல்லின்  அறுகம்புல்லின் ஊறல் அறுகம்கட்டை  அறுப்பதால்  கண்நோய்  குருதியழல்  தலை நோய்· இவை நீங்கும்  நீரையும் கண் புகைச்சல்  நோய்களை வேருடன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...