அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் சித்தர்கள் அறுகு என பெயரிட்டுள்ளனர்.
இடகலை, பிங்கலை நமது தச நாடிகளில் பிரதானமானது, அறுகம்புல் இவை இரண்டையும் மற்றும் இவை சார்ந்த 72000 நரம்புகளையும் இயக்கவல்லது.
அறுகம்புல்லின் ஊறல் நீரையும் , பாளையும் சேர்த்து உட்கொள்ள கண் புகைச்சல், கண்நோய், குருதியழல், தலை நோய் இவை நீங்கும் .
அறுகம்புல்லுடன் சிறிது அலவு மஞ்சள் சேர்த்து அரைத்து தடவி வந்தால் , படர்தாமரை சொறி,சிரஙகு நுண்புழு ஒழியும்.
அறுகம்கட்டை கணு நீக்கி ஒரு பிடியெடுத்து அதனுடன் பதிமுன்று மிளகு சேர்த்து இடித்து அரைப்படி நீர்விட்டு அரை அழக்காக சுண்டும் படி கஷாயம் இட்டு சாப்பிடவும். இப்படி காலை, மாலை இரண்டு வேளையும் பாத்து நாள் சாப்பிட்டால் மேகசுரம் , உடம்பு சூடு முதலியன நீங்கும்.
மாட்டு சாணியை உருண்டையா பிடித்து அதற்கு பொட்டு வைத்து அதன் தலையில் அருகம்புல்லைச்செருகி வைத்தால் சில நாள் சென்று சாணி சுக்கலாக காய்ந்து இருக்கும். இதற்கு காரணம் அறுகம்புல்லின் வேர் பாகத்தில் இருக்கும் கிருமி நாசிணி சாணியில் இருக்கும் அசுத்த கிருமிகளை வேதியல் மாற்றத்தால் நீக்கி சுத்தப்படுத்துகிறது
இதையே மற்றொரு சாணியில் அறுகம்புல் செருகாமல் வைத்தால் அவற்றில் புழுபுழுத்து உதிர்ந்து காணப்படும். இவற்றில் இருந்து அறுகம்புல்லுக்கு எந்த அளவிற்கு மருத்துவ குணம் உண்டு என்பதை நாம் புரிந்த கொள்ள வேண்டும்.
அறுகம்புல்லின் கணு பாகம் நச்சு தன்மையுடையது எனவே இதை நீக்கிப் பயன படுத்த வேண்டும் என்பது மருத்துவ விதியாகும்.
Tag; arugampul medicinal அறுகம்கட்டை அறுகம்புல் அறுகம்புல் இராஜ மூலிகையாகும் அறுகம்புல் நோய்களை வேருடன் அறுகம்புல்லின் அறுகம்புல்லின் ஊறல் அறுகம்கட்டை அறுப்பதால் கண்நோய் குருதியழல் தலை நோய்· இவை நீங்கும் நீரையும் கண் புகைச்சல் நோய்களை வேருடன்
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.