அமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்

அம்மாமக்கள் முன்னேற்றக் கழகத்தை மன்னார்குடி மாபியா என்றுதான் கருதுவதாக துக்ளக் ஆசிரியரான, ஆடிட்டர் குருமூர்த்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய குருமூர்த்தி, அதிமுகவுடன்-சசிகலா இணைந்து செயல்படவேண்டும் என்ற தொனியில், பேசியதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில்தான், குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதை பாருங்கள்:1987ம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ராஜீவ் காந்தி அரசின் ஊழல்களை அம்பல படுத்த சந்திரா சாமி உதவியை நாடியது. சந்திராசாமி நல்லவர் இல்லை என்றபோதிலும் இந்த விஷயத்தில் அவரது உதவியை பெற்றது பற்றி அருண்ஷோரி இப்படி ஒருவிளக்கம் அளித்தார்: தீ பற்றிக்கொண்டு எரியும் போது கங்கை நதிக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது. சாக்கடை நீரையும் அள்ளிவீசி நெருப்பை அணைக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது என்றார்.

துக்ளக் ஆண்டு விழாவின்போது பாஜக-அம்மா முன்னேற்ற கழகம் மற்றும் அழகிரி ஆகியோருடன் இணைந்து திமுகவை எதிர்க்குமா என்று என்னிடம் கேள்வி எழுப்பப் பட்டது. அப்போது இந்த உதாரணத்தை நான்பதிலாக சொன்னேன். பாஜக என்ன செய்யப்போகிறது என்பது எனக்குதெரியாது. ஆனால் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்பது துக்ளக் இதழ் நிலைப்பாடு. ஒருவேளை.. வாசகர் என்னிடம் கேட்டதைப்போல பாஜக மற்றும் அதிமுக கட்சிகள், நாம் யாரை சாக்கடை நீர் என்று கருதுகிறோமோ, அவர்களின் ஆதரவை பெறுமானால், அப்போதுஅதை துக்ளக் ஆதரிக்காது.

எனவே அம்மாமக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு, நான் ஆதரவுதருவதாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? அமமுக கட்சியை, யாரோ ஒருவர் கூறியதைபோல, நான் இன்னமும் மன்னார்குடி மாபியா என்று தான் கருதிவருகிறேன். ஒருவேளை பாஜக அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் கூட, மாபியா என்றுதான் அழைப்பேன்.

மன்னார்குடி மாபியாவை மாபியா என்று தான் துக்ளக் பார்க்கும். அதிமுகவை, திமுகபோல ஒரு குடும்ப கட்சியாக அந்தமாபியா மாற்றிவிடும் என்று துக்ளக் நம்புகிறது. எங்களுடைய கருத்து மாறப்போவது கிடையாது. நான் சொன்னது பற்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செய்திகள் வெளியாகி உள்ளதால் இந்தவிளக்கத்தை அளிக்கிறேன். சாக்கடை என்று வர்ணிக்கப்படும் சந்திராசாமிக்கு இணையாக கருதப்படும் ஒருவரை நான் எப்படி ஆதரிப்பேன்? எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ள பட்டுள்ளது. இவ்வாறு குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...