தேவேந்திரகுள வேளாளர் சட்டத்திருத்த மசோதா வரவேற்கத்தக்கது

முதல் முறையாக தேவேந்திரா குலவேளாளர் என்ற ஒரு சமூகம், எஸ்.சி பிரிவில் இருந்து விலக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்ததின் அடிப்படையில், ஏழு பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யபட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதாவது, தமிழகத்தில் மாநிலபட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியார் ஆகிய ஏழு உட்பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் என பொதுப்பெயரிட வேண்டும் என்று அச்சமூகத்தினர் மற்றும் புதிய தமிழகம் கட்சி மற்றும் தலித் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன.

இதுதொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் தமிழக அரசு நியமித்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஏழு உட்பிரிவுகளை சேர்ந்தவர்களையும் இனி தேவேந்திரகுல வேளாளர் என பொதுபெயர் இட வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெரிவித்தார். அதற்கு முன்னதாகவே கடந்த 2015ஆம் ஆண்டு நரேந்திரமோடி அவர்களை தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் நேராக சந்தித்து தங்களது நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தினர். அப்போது பிரதமர் நரேந்திரமோடி இச்சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை உணர்ந்து கொண்டதாக கூறியிருந்தார். குறிப்பாக இச்சமூகத்தினர் தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக உள்ளனர்.

தமிழகத்தில் அரசியல் ரீதியாக மிகமுக்கிய சமூகங்களில் ஒன்றாக கருதப்படும் இச்சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தமிழக அரசு தொடர்ந்து கூறிவந்தது. இந்நிலையில் தமிழகரசின் இந்த பரிந்துரையை ஏற்று, இந்த 7 பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயர் இட வகைசெய்யும் சட்ட திருத்த மசோதாவை, மக்களவையில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் இந்த மசோதா தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அமர்வில் விவாதத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அவைகளில் விவாதத்திற்குப்பின் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்றபின் சட்டமாகும்.

இந்நிலையில் இச்செய்தியை மேற்கோள்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துபதிவிட்டுள்ள பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் தேவேந்திரகுல வேளாளர் என்ற சமூகம் எஸ்.சி பிரிவிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதும், அதை ஏற்று ஏழு பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுள வேளாளர் என அழைக்கும் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதும் வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...