அருகன்புல்லின் மருத்துவ குணம்

 அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக மரத்தின் உள்பட்டை இவைகளையெல்லாம் அம்மியில் வைத்து அரைத்து, காலை, பகல், மாலை என்று மூன்று வேளை, நெல்லிக்காயளவு சாப்பிட்டு சிறிதளவு வெந்நீர் குடிக்க வேண்டும்.

அருகம்புல்லை ஊறவைத்து கியாழம் வைத்து, பாலுடன் சேர்த்து உட்கொள்ள, மூல இரத்தம், நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் நீங்கும். அருகம்புல்லை, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டிச் சாற்றைக் கண்ணுக்குள் பிழிய கண்நோய், கண்புகைச்சல் போகும்.

மூக்கிலிட இரத்த பீனிசமும், காமய்பட்ட இடத்தில் பூச, இரத்தம் வடிதலும் நிற்கும். புண்கள் மீது தடவ, புண்கள் ஆறும். வெள்ளிக்கிழமைகளில் 15 முதல் 30 மில்லி. குடித்து வர பெருச்சாளிவிடம் நீங்கும்.

அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் தடவி வர சொறி, சிரங்கு, படர் தாமரை கிருமிரோகம், சீதபித்தம் நீங்கும்.

இதன் வேரை கணுக்கள் போக்கி 10 கிராம் எடுத்து அத்துடன் வெண்மிளகு 10 எடுத்து சேர்த்து, கஷாயமிட்டு வடித்து அதில் பாக்கு அளவு பசுவின் வெண்ணெய் கூட்டி உட்கொள்ள மருந்தின் வேகம், இரசவேக்காடு, மூலக்கடுப்பு, நீர்க்கடுப்பு, நீரடைப்பு (கல்) வெட்டை மூத்திர தாரை எரிச்சல் முதலியவை நீங்கும். பெரும்பாடு பூரணமாக குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...