நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

 எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். மனதிற்கு நல்ல மகிழ்ச்சியுண்டாகும். நல்ல தேகபுஷ்டி உண்டாகும். நல்ல பலம் உண்டாகும். உடலில் நல்ல ஒளியுண்டாகும். வாலிபத் தன்மை என்றும் நிலைத்திருக்கும். கண்கள் சம்பந்தப்பட்ட நோய், செவி நோய், கபால அழல்நோய் காச நோய் மட்டுமன்றி உடல் புண்களும் குணமாகும்.

ஆண்களைப் பொறுத்தவரையில் சனியும் புதனும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பெண்களைப் பொறுத்தவரையில் செவ்வாயும் வெள்ளியும் கட்டாயம் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

அதிகாலையில் எண்ணெய் தேய்த்து சூரிய உதயத்திற்கு முன்னால் குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்துக் கொண்டதும் உடனே குளிக்க கூடாது. குறைந்தது அரைமணி நேரமாவது பொறுத்துதான் குளிக்க வேண்டும்.

நல்லெண்ணெய் அவ்விதமே உபயோகிக்கக் கூடாது. காய்ச்சி ஆற வைத்துதான் குளிக்க வேடும். அதிலும் வெந்நீரில்தான் குளிக்க வேணும். சோப் உபயோகிக்கக்கூடாது. சீயக்காய்த்தூள் அல்லது அரைப்பு தேய்த்துதான் குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்க்கும்போது, எண்ணெயை இருதயத்தை நோக்கித் தேக்க வேண்டும். இவ்விதம் தேய்த்து வந்தால் தோல் நல்ல பளபளப்புடன் காணப்படும். உடற்சூடு கண்டிப்பாகத் தணியும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...