கரோனா மனிதநேயம் தொடர்பானது

கரோனா பெருந்தொற்று அரசியல் பிரச்சினைஅல்ல, மனிதநேயம் தொடர்பான பிரச்சினை என்று பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நேற்றுகாலை டெல்லியில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் , பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி பேசினார். அவரது பேச்சு விவரங்களை கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கரோனா பெருந்தொற்று பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினையல்ல. ஆனால், நமக்கும் இந்த அரசுக்கும் மனித நேயம் தொடர்பான பிரச்சினை. 100 ஆண்டுகளுக்குப்பின் இந்த பூமியில் இதுபோன்ற பெருந்தொற்று உருவாகியுள்ளது. 100 ஆண்டுகளுக்குமுன் மக்கள் பட்டினியால் உயிரிழந்தனர். ஆனால், முதல்முறையாக, மிகப்பெரிய அளவிலான மக்கள்ரேஷன் பொருட்களைப் பெருந்தொற்று காலத்தில் பெற்றார்கள், ஒருவர்கூட பட்டினியுடன் தூங்கவில்லை. நமது கடமையை பொறுப்புடன் செய்துள்ளோம். தடுப்பூசியாக இருந்தாலும் சரி, ஏழைகளுக்கான நலத்திட்டங்களாக இருந்தாலும்சரி, அவை மக்களுக்கு கிடைப்பதை எம்.பி.க்கள் உறுதிசெய்ய வேண்டும்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், குறிப்பாக 2 அல்லது3 மாநிலங்களில் சுருங்கிவிட்ட கட்சி(காங்கிரஸ்) நடந்துகொள்ளும் முறை வேதனையளிக்கிறது. அதிகாரம் தங்களின் உரிமை, எனநினைத்து காங்கிரஸ்கட்சி தனது விருப்பம்போல் செயல்படுகிறது. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் சுமூகமாக நடக்கவிரும்புகிறோம். ஆனால் அவையை நடத்தவிடாமல் அமளிசெய்து, காங்கிரஸ் கட்சி மிகுந்த பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது.

நாட்டு மக்களைப்பற்றி காங்கிரஸ் கட்சி கவலைப்படவில்லை.மக்கள் பாஜகவை 2-வது முறையாக ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்ததை அவர்களால் ஜீரணிக்கமுடியவில்லை. பாஜக எம்.பி.க்கள்மத்திய அரசின் உண்மையான செயல்பாடுகளை மக்களின் முன்எடுத்துச் சென்று, எதிர்க்கட்சிகளின் பொய்களை வெளிப்படுத்த வேண்டும். கரோனா 3-வது அலை வரலாம் என்று எதிர்பார்க்க படுகிறது. நிலைமைகளை சந்தித்து பணியாற்ற எம்.பி.க்கள் தயாராக இருக்கவேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மாநிலங்களவையில் நேற்று மாலை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எதிர்க் கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கு பதிலளித்து பேசியதாவது: கரோனா வைரஸ் பரவலைதடுப்பதில் மாநில முதல்வர்கள் சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் பாராட்டு தெரிவித்து வருகிறார். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் வெற்றி பெறும்போது, மாநில முதல்வர்கள் வெற்றியை சொந்தம் கொண்டாடு கின்றனர். தோல்வி ஏற்பட்டால் பிரதமர் நரேந்திர மோடியை குற்றம் சாட்டுகின்றனர். கரோனா விவகாரத்தை அரசியலாக்கவேண்டாம்.

சில மாநிலங்கள் தடுப்பூசி விவகாரத்தை அரசியலாக்கி வருகின்றன. ஆனால் எந்தமாநில அரசு மீதும் நாங்கள் குற்றம்சாட்ட விரும்பவில்லை. நாட்டின் 130 கோடி மக்களும், அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல் பட்டால் கரோனா 3-வது அலையைதடுக்க முடியும். பிரதமர் நரேந்திரமோடியின் வழிகாட்டுதல்படி செயல்பட்டால் 3-வது அலையில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ள முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...