கரோனா மனிதநேயம் தொடர்பானது

கரோனா பெருந்தொற்று அரசியல் பிரச்சினைஅல்ல, மனிதநேயம் தொடர்பான பிரச்சினை என்று பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நேற்றுகாலை டெல்லியில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் , பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி பேசினார். அவரது பேச்சு விவரங்களை கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கரோனா பெருந்தொற்று பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினையல்ல. ஆனால், நமக்கும் இந்த அரசுக்கும் மனித நேயம் தொடர்பான பிரச்சினை. 100 ஆண்டுகளுக்குப்பின் இந்த பூமியில் இதுபோன்ற பெருந்தொற்று உருவாகியுள்ளது. 100 ஆண்டுகளுக்குமுன் மக்கள் பட்டினியால் உயிரிழந்தனர். ஆனால், முதல்முறையாக, மிகப்பெரிய அளவிலான மக்கள்ரேஷன் பொருட்களைப் பெருந்தொற்று காலத்தில் பெற்றார்கள், ஒருவர்கூட பட்டினியுடன் தூங்கவில்லை. நமது கடமையை பொறுப்புடன் செய்துள்ளோம். தடுப்பூசியாக இருந்தாலும் சரி, ஏழைகளுக்கான நலத்திட்டங்களாக இருந்தாலும்சரி, அவை மக்களுக்கு கிடைப்பதை எம்.பி.க்கள் உறுதிசெய்ய வேண்டும்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், குறிப்பாக 2 அல்லது3 மாநிலங்களில் சுருங்கிவிட்ட கட்சி(காங்கிரஸ்) நடந்துகொள்ளும் முறை வேதனையளிக்கிறது. அதிகாரம் தங்களின் உரிமை, எனநினைத்து காங்கிரஸ்கட்சி தனது விருப்பம்போல் செயல்படுகிறது. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் சுமூகமாக நடக்கவிரும்புகிறோம். ஆனால் அவையை நடத்தவிடாமல் அமளிசெய்து, காங்கிரஸ் கட்சி மிகுந்த பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது.

நாட்டு மக்களைப்பற்றி காங்கிரஸ் கட்சி கவலைப்படவில்லை.மக்கள் பாஜகவை 2-வது முறையாக ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்ததை அவர்களால் ஜீரணிக்கமுடியவில்லை. பாஜக எம்.பி.க்கள்மத்திய அரசின் உண்மையான செயல்பாடுகளை மக்களின் முன்எடுத்துச் சென்று, எதிர்க்கட்சிகளின் பொய்களை வெளிப்படுத்த வேண்டும். கரோனா 3-வது அலை வரலாம் என்று எதிர்பார்க்க படுகிறது. நிலைமைகளை சந்தித்து பணியாற்ற எம்.பி.க்கள் தயாராக இருக்கவேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மாநிலங்களவையில் நேற்று மாலை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எதிர்க் கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கு பதிலளித்து பேசியதாவது: கரோனா வைரஸ் பரவலைதடுப்பதில் மாநில முதல்வர்கள் சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் பாராட்டு தெரிவித்து வருகிறார். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் வெற்றி பெறும்போது, மாநில முதல்வர்கள் வெற்றியை சொந்தம் கொண்டாடு கின்றனர். தோல்வி ஏற்பட்டால் பிரதமர் நரேந்திர மோடியை குற்றம் சாட்டுகின்றனர். கரோனா விவகாரத்தை அரசியலாக்கவேண்டாம்.

சில மாநிலங்கள் தடுப்பூசி விவகாரத்தை அரசியலாக்கி வருகின்றன. ஆனால் எந்தமாநில அரசு மீதும் நாங்கள் குற்றம்சாட்ட விரும்பவில்லை. நாட்டின் 130 கோடி மக்களும், அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல் பட்டால் கரோனா 3-வது அலையைதடுக்க முடியும். பிரதமர் நரேந்திரமோடியின் வழிகாட்டுதல்படி செயல்பட்டால் 3-வது அலையில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ள முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...