பேசியது தேச விரோத செயல் பாஜக எதிர்ப்பு பாதிரி கைது

 

பேசியது தேச விரோத செயல் பாதிரியார் ஜார்ஜ் பொண்ணையாவை, கைது செய்ய வேண்டும் என்ற பாஜகவின் அழுத்தத்தை தொடர்ந்து அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை விவரம் வருமாறு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மத ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையில் சட்டவிரோதமாக பேசியுள்ள ஜார்ஜ் பொன்னையா என்பவரை கைது செய்திட வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக மாவட்ட தலைவர்கள் தலைமையில் தமிழக அரசை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை 24.07.2021 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்வார்கள். தேச ஒற்றுமைக்கு எதிராகவும் உயர்பதவியில் இருக்கக்கூடிய தலைவர்களை மிக மிக மோசமான வார்த்தைகளை பிரயோகித்து பேசியிருப்பது மனசாட்சி உள்ள எவரும் மன்னிக்க முடியாதது.

சமூக ஊடங்களில் சிறிய பதிவுகளை போடுபவர்களை கூட கைது செய்து சிறையில் அடைக்கக் கூடிய தமிழக அரசு பொன்னையா மீது 7 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்த பிறகும் கைது செய்யாமல் இருப்பது மிகவும் வேடிக்கையானது.

ஏற்கனவே பொன்னையா மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. பொது அமைதிக்கும் மக்களிடையே இருக்கக்கூடிய சமூக, சமத்துவ ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் கூட்டத்தில் பேசுகிறேன் என்று சொல்லி விஷத்தை கக்கி இருக்கிற பொன்னையாவை கண்டித்தும்,

அவரை கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும் நாளை தமிழக பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். பேசியது தேச விரோத செயல் என்று தெரிந்தும் கைது செய்யவில்லை என்றால் இவரை பேச வைத்தது திமுக தான் என்ற முடிவுக்கு வரவேண்டியது இருக்கும்.

நன்றி அண்ணாமலை
பாஜக மாநில தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...