பேசியது தேச விரோத செயல் பாஜக எதிர்ப்பு பாதிரி கைது

 

பேசியது தேச விரோத செயல் பாதிரியார் ஜார்ஜ் பொண்ணையாவை, கைது செய்ய வேண்டும் என்ற பாஜகவின் அழுத்தத்தை தொடர்ந்து அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை விவரம் வருமாறு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மத ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையில் சட்டவிரோதமாக பேசியுள்ள ஜார்ஜ் பொன்னையா என்பவரை கைது செய்திட வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக மாவட்ட தலைவர்கள் தலைமையில் தமிழக அரசை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை 24.07.2021 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்வார்கள். தேச ஒற்றுமைக்கு எதிராகவும் உயர்பதவியில் இருக்கக்கூடிய தலைவர்களை மிக மிக மோசமான வார்த்தைகளை பிரயோகித்து பேசியிருப்பது மனசாட்சி உள்ள எவரும் மன்னிக்க முடியாதது.

சமூக ஊடங்களில் சிறிய பதிவுகளை போடுபவர்களை கூட கைது செய்து சிறையில் அடைக்கக் கூடிய தமிழக அரசு பொன்னையா மீது 7 பிரிவுகளில் வழக்கு தொடர்ந்த பிறகும் கைது செய்யாமல் இருப்பது மிகவும் வேடிக்கையானது.

ஏற்கனவே பொன்னையா மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. பொது அமைதிக்கும் மக்களிடையே இருக்கக்கூடிய சமூக, சமத்துவ ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் கூட்டத்தில் பேசுகிறேன் என்று சொல்லி விஷத்தை கக்கி இருக்கிற பொன்னையாவை கண்டித்தும்,

அவரை கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும் நாளை தமிழக பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். பேசியது தேச விரோத செயல் என்று தெரிந்தும் கைது செய்யவில்லை என்றால் இவரை பேச வைத்தது திமுக தான் என்ற முடிவுக்கு வரவேண்டியது இருக்கும்.

நன்றி அண்ணாமலை
பாஜக மாநில தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...