அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி

” யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது கடமைகளைச் செய்கிறேன், ” என பிரதமர் மோடி கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டில் நடந்த அரசியலமைப்பு தின விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு மற்றும் நாட்டின் தேவைக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்பு உள்ளது. காஷ்மீரில் அம்பேத்கரின் அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முதல்முறையாக அங்கு, அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இன்று இந்திய பெரிய அளவிலான மாற்றத்தை நோக்கி சென்று கொண்டு உள்ளது. அதற்கு இந்திய அரசியலமைப்பு நம்மை வழிநடத்துகிறது. நமக்கு ஒளிவிளக்காக திகழ்கிறது.

அரசியல் நிர்ணய சபை விவாதத்தின் போது ” அரசியலமைப்பு என்பது வெறும் வழக்கறிஞரின் ஆவணம் இல்லை” என்று அம்பேத்கர் கூறினார். இன்று இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு. இது நாட்டின் பெருமைக்குரிய விஷயம். அரசியலமைப்புக்கும், அரசியலமைப்பு சபைகளுக்கும் நான் தலைவணங்குகிறேன்.

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடந்த தினம் இன்று. அப்போது உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இந்தியாவின் பாதுகாப்புக்கு சவால்விடும் பயங்கரவாத அமைப்புகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்ற இந்தியாவின் தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதை பார்த்தோம். ஜனநாயகம் முன்பு எழுந்த சவாலை அரசியலமைப்பு எதிர்கொண்டது. இதுதுான் நமது அரசியலமைப்பின் பலம். காஷ்மீரில், அம்பேத்கரின் அரசியலமைப்பு முழுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. முதல்முறையாக காஷ்மீரில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

அரசியலமைப்பின் அசல் புத்தகத்தில் கடவுள் ராமர், சீதையின் உருவங்கள் அதில் உள்ளன. இந்த படங்கள் இந்திய கலாசாரத்தை பிரதிபடுத்துபவை. இவை எப்போதும் மனித மாண்புகளை நினைவுபடுத்துகிறது. இந்த மாண்புகளே இன்றைய இந்தியாவின் கொள்கை மற்றும் முடிவுகளுக்கு அடிப்படையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

திஹார் சிறையில் உள்ள கைதி வரைந்த ஓவியத்தை, பிரதமர் மோடிக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நினைவுப்பரிசாக வழங்கினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...