ஜெக்தீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அனுமதிக்க முடியாது – கிரண் ரஜிஜு

மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அனுமதிக்க முடியாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே அதானி விவகாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதை அரசு ஏற்க மறுப்பதால் இரு அவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் அவையின் செயலாளரிடம் நேற்று முன்தினம் நோட்டீஸ் வழங்கினார். சுமார் 70 எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருந்த அதில், “அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது அடிக்கடி குறுக்கிடுகிறார். முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி கொடுக்க மறுக்கிறார். நாடாளுமன்ற விதிகளை மீறுகிறார்” என கூறப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நேற்று காலையில் மாநிலங்களவை கூடியதும், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது: அவைத் தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள். அவைத் தலைவரின் கண்ணியத்தின் மீது தாக்குதல் நடத்தினால் அவரை நாங்கள் பாதுகாப்போம். அவைத் தலைவரை மதிக்காவிட்டால் உறுப்பினராக இருப்பதற்கு உங்களுக்கு (எதிர்க்கட்சி எம்.பி.க்கள்) உரிமை இல்லை. நாம் பதவியேற்கும்போது நாட்டின் இறையாண்மையை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துள்ளோம். ஆனால் நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு ஆதரவாக நீங்கள் செயல்படுகிறீர்கள். இவரைப் போன்ற தலைவர் கிடைப்பது கடினம். ஏழைகளின் நலன் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பது குறித்து அவர் அடிக்கடி பேசுவார். நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் என்ற நாடகத்தை அனுமதிக்க முடியாது. ஜார்ஜ் சோரஸுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே எத்தகைய உறவு உள்ளது என்பது பற்றி தெரிவிக்க வேண்டும். நாட்டு மக்களிடம் காங்கிரஸ் மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...