மத்திய அரசு மீது வெளிநாட்டு நிதியின் கீழ் அவதூறு பரப்புவதாக புகார்

மத்தியஅரசு மீது வெளிநாட்டு நிதி உதவியின் கீழ் அவதூறு பரப்பப்படுவதாக பாஜக எம்பி சுதன்ஷு திரிவேதி மாநிலங்களவையில் குற்றம் சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எட்டாவது நாளாக இன்றுவழக்கம்போல கூடியது. மாநிலங்களவையில் இன்றைக்கு பிறந்த நாள் கொண்டாடிய உறுப்பினர்கள் வாழ்த்துகள் கூறப்பட்டது. தொடர்ந்துமாநிலங்களவை குழுக்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் பின்னர், தமிழகத்தின் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிப்பதற்காக திமுக எம்பி திருச்சி சிவா, அதிமுக எம்பி தம்பித்துரை ஆகியோர் நோட்டீஸ் அளித்திருப்பதாக மாநிலங்களவைத் தலைவர் தன்கர் அறிவித்தார். இதனை ஜீரோ ஹவரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாக கூறினார். தொடர்ந்து ஜீரோ ஹவர் தொடங்குவதாக அறிவித்த மாநிலங்களவைத் தலைவர், முதலில் பாஜக எம்பி சுதன்ஷு திரிவேதி கொடுத்திருந்த விவகாரம்குறித்து விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவதாக கூறி அவரை பேச அழைத்தார்.

இதையடுத்து பேசிய சுதன்ஷூ திரிவேதி, இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு வெளிநாட்டு நிதி உதவியுடன் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றதாகவும், நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் தொடங்கும் முன்பு அவையை முடக்கும் வகையில் வெளிநாட்டு நிதி உதவியுடன் பெகாசஸ் உளவு விவகாரம், ஹிண்டர்பர்க் அறிக்கை உள்ளிட்டவை வெளியிடப்பட்டதாகவும் பேசினார்.

அவரது பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவைத் தலைவர் தன்கர், எதிர்கட்சிகளும் இந்த விவாதத்தில் பங்கேற்கலாம். அமைதியாக இருங்கள். அவர் பேசி முடித்ததும் வாய்ப்பு தருகின்றேன் என்றார். ஆனால், எதிர்கட்சியினர் ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து மாநிலங்களவை தலைவர் தன்கர்,மேற்குவங்கத்தை சேர்ந்த எம்பி டெரெக் ஓ பிரையனை பேச அழைத்தார். அவர் இருக்கையில் எழுந்து பேச முயற்சித்தபோது பேசுவதற்கான மைக் ஆன் ஆகவில்லை. மேலும் கூச்சல் குழப்பமும் ஓயவில்லை. எனவே மாநிலங்களவை தொடங்கிய 16 நிமிடத்துக்குள் நண்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மக்களவையில் சம்பல் விவகாரம் எதிரொலிப்பு: மக்களவையில், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உ.பி சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று மக்களவையில் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் சுமுகமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சம்பல் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மேலும், அதானி மீதான அமெரிக்கா வழக்கு குறித்து நாடாளுமன் கூட்டு குழு அமைக்க வேண்டும் என்றும் எதிர்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்தன. ஆனால், அவர்களின் கோரிக்கையை மக்களவை தலைவர் ஓம்பிர்லா ஏற்கவில்லை. எனினும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் மதிய உணவு இடைவேளை வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...