வளர்ச்சி பாதைக்குள் இந்திய பொருளாதாரம் திரும்பும் – அமைச்சர் கோயல் நம்பிக்கை

நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்குள், இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.40 சதவீதமாக சரிந்ததை தொடர்ந்து, நாட்டின் பொருளாதார நிலை குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்ததாவது: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டின் போது, நாட்டில் பொதுத் தேர்தல் நடந்தது. தேர்தல் காலகட்டத்தின் போது, கொள்கை முடிவுகள் மேற்கொள்வது, அதனை செயல்படுத்துவது போன்றவை பாதிப்புக்குள்ளாவது இயல்பே. இதனால் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கான செலவினம் குறைந்து, வளர்ச்சி சரிந்தது. இதன் பிரதிபலிப்பே இரண்டாம் காலாண்டு முடிவில் வெளிப்பட்டது.

ஆனால், நடப்பு காலாண்டின் பொருளாதார தரவுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன. மீண்டெழுந்துள்ள உள்கட்டமைப்பு செலவு உள்ளிட்டவற்றின் காரணமாக, நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் நாடு மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...