வரும் 2025-26ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என பார்லிமென்டில் இன்று (ஜன.,31) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை (பிப்.,01) 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜன.,31) பார்லிமென்டில் சமர்ப்பித்தார். பின்னர் லோக்சபாவை நாளை காலை வரை ஒத்திவைத்து சபாநாயகர் அறிவித்தார்.
அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
* இந்திய பொருளாதாரம் வலுவாகவே உள்ளது.
* வரும் 2025-26ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும்.
* சில்லரை பணவீக்கம் படிப்படியாக நிர்ணயித்த இலக்கில் சீராக இருக்கும்.
* வரும் நிதியாண்டின் 4வது காலாண்டில் உணவு விலைவாசி குறைய வாய்ப்பு உள்ளது.
* கிராமப்புறங்களில் நுகர்வு தேவை மீண்டும் அதிகரித்துள்ளது.
* நாட்டில் தற்போது பாதுகாப்பற்ற கடன்கள் அதிகரித்து வருகிறது.
* சீர்திருத்தங்கள் மூலம் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |