கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம விருது பெற்றவருமான துளசி கவுடாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: துளசி கவுடாவின் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. துளசி கவுடா, கர்நாடகத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் பத்ம விருது பெற்றவர்.
இயற்கையை வளர்ப்பதற்கும், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடுவதற்கும், நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அவர் ஒரு வழிகாட்டியாக இருந்தார். அவரது பணிகள் வரும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். ஓம் சாந்தி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |