பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை 139 பேருக்கு மத்திய அரசு இன்று அறிவித்து உள்ளது.
இந்நிலையில் பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பத்ம விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். அவர்களின் அசாதாரண சாதனைகளை இந்தியா கௌரவிப்பதிலும் கொண்டாடுவதிலும் பெருமை கொள்கிறது. அவர்களின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன. விருது பெறும் ஒவ்வொருவரும் கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் புதுமைக்கு ஒத்தவர்கள், இது எண்ணற்றவர்களை நேர்மறையாக பாதித்துள்ளது. சிறந்து விளங்க பாடுபடுவது மற்றும் தன்னலமின்றி சமூகத்திற்கு சேவை செய்வதன் மதிப்பை அவை நமக்குக் கற்பிக்கின்றன.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |