மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.
நீரிழிவு நோய் நீங்க
மாம்பூக்கள் 20கிராம், நாவற் பழக்கொட்டை 20 கிராம், மாந்தளிர் 20 கிராம் இவை அனைத்தையும் வெயிலில் காய வைத்து, இதை எடுத்துத் தூளாக்கி வைத்துக்கொண்டு தினமும் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கலக்கி அருந்த வேண்டும். இவ்வாறு 1 மண்டலம் (4௦) நாள் தொடர்ந்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.
பல் நோய் குணமாக
தேவையான மாம்பூக்களையும், மாந்தளிரையும் பறித்து நீரில் போட்டுக் காய்ச்சி, அந்த நீரில் வாயைக் கொப்பளித்தால் நாளடைவில் பல் சம்மந்தமான நோய்கள் நீங்கும்.
மூல நோய் நீங்க
மாம்பூவுடன் சீரகத்தையும் சேர்த்து இடித்துப் பொடியாக்கிச் சலித்து, சலித்த தூளில் 2 சிட்டிகை எடுத்துச் சர்க்கரையுடன் கலந்து சாப்பிடலாம்; அல்லது தயிரில் கலந்தாவது சாப்பிடலாம். இதன் மூலம் நாளடைவில் மூல நோயும், உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்களும் நீங்கும்.
தொண்டை கம்மல் நிற்க
மாம்பூ கஷாயத்துடன் தேனும், எலுமிச்சம்பழச் சாறும் விட்டுக் கலந்து வாயில் ஊற்றித் தொண்டை நனையக் கொப்பளித்தால் போதும்; நாளடைவில் தொண்டை கம்மல் நீங்கி விடும்.
கொசு நீங்க
மாம்பூவை அதிக அளவில் எடுத்துக் காயவைத்துத் தூள் செய்து, அத்தூளைப் புகையிடக் கொசுக்கள் நீங்கிவிடும்.
நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.