மொரீஷியஸ் உடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள்; மகாசாகர் திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி

போர்ட் லுாயிஸ், இந்தியா – மொரீஷியஸ் இடையே எட்டு ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி முன்னிலையில் நேற்று கையெழுத்தாகின. கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியஸ் நாட்டின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்றார். இரண்டு நாள் பயணமாக அங்கு சென்ற மோடி, தலைநகர் போர்ட் லுாயிசில் நடந்த நிகழ்ச்சியில் மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலத்துடன் பங்கேற்றார்.

கடல் சார் பாதுகாப்பு, தரவுகள் பகிர்தல், அந்தந்த நாட்டின் கரன்சியை பயன்படுத்தி வர்த்தகம் செய்தல், பண மோசடி தடுப்பில் ஒத்துழைப்பு, தொழில்நுட்ப கூட்டுறவு உள்ளிட்ட விஷயங்களில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அவை அனைத்தையும் விட முக்கியமானது, பாதுகாப்பு விஷயத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான உடன்பாடு.

மோடி பிரதமரான மறு ஆண்டில், ‘சாகர்’ என்ற ஒரு திட்டத்தை அறிவித்தார். இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகள் தங்களது பொருளாதார முன்னேற்றத்துக்காக இணைந்து செயல்படுவது அந்த திட்டத்தின் குறிக்கோள்.

பத்தாண்டுகளுக்கு பிறகு இப்போது அந்த திட்டத்துக்கு, ‘மகாசாகர்’ என்று புது பெயர் சூட்டி அறிமுகம் செய்திருக்கிறார் மோடி.

இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகள், பொருளாதார முன்னேற்றத்துக்காக மட்டுமின்றி, பாதுகாப்புக்காகவும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை மகாசாகர் வலியுறுத்துகிறது.

இது, மொரீஷியஸ் நாட்டுடன் முன் எப்போதும் இல்லாத ஒரு நெருக்கத்தை உருவாக்கும் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

உலகம் முழுதும் தன் கடற்படை வலிமையை பெருக்கி வரும் சீனா, இந்திய பெருங்கடலில் உள்ள நாடுகளையும் தன் வலைக்குள் இழுக்க தீவிரமாக முயற்சி செய்கிறது.

அந்த பின்னணியில் பார்க்கும்போது, மொரீஷியசை சீன வலையில் விழாமல் தடுத்து காப்பாற்றும் பொறுப்பை இந்தியா இந்த உடன்பாடு வாயிலாக ஏற்றுக் கொண்டிருப்பதாக கருதலாம்.

தீவுகள் நிறைந்த சின்னஞ்சிறு நாடு மொரீஷியஸ். ஆனால், இந்திய பெருங்கடலில், ஆப்ரிக்காவின் தென் பகுதிக்கு நெருக்கமாக அமைந்திருப்பதாலும், ஒரு நேர்கோட்டில் இந்தியாவை இணைக்கும் அளவுக்கு வசதியான கடல் பாதையில் அமைந்திருப்பதாலும், ராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மதிக்கப்படுகிறது.

இந்திரா பிரதமராக இருந்தபோது, மொரீஷியசில் வாழும் இந்திய வம்சாவளியினர் ஆட்சிக்கு எதிரான புரட்சி முயற்சியை முறியடிக்க, இந்திய ராணுவத்தையும் கடற்படையையும் அனுப்ப இருந்தார்.

‘ஐந்து மணி நேரத்தில் என் படைகள் உங்கள் நாட்டில் தரையிறங்கும்’ என அப்போதைய மொரீஷியஸ் பிரதமருக்கு இந்திரா உறுதி அளித்தார்.

நம் தளபதிகளின், ‘ஈகோ’ மோதலால் அந்த ஆப்பரேஷன் நடக்காமலே போனது வேறு விஷயம்.

மொரீஷியஸ் 1968ல் சுதந்திரம் பெற்றபோது, சாகோஸ் என்ற 60 தீவுகள் கொண்ட நிலப்பரப்பை பிரிட்டன் தன் வசம் வைத்துக் கொண்டது. அமெரிக்காவுக்கு அதை நீண்டகால குத்தைக்கு விட்டது.

இரு நாடுகளும் சேர்ந்து டீகோ கார்சியா கடற்படை தளத்தை அமைத்துள்ளன. சாகோஸ் தீவுகளை திருப்பி தருமாறு பிரிட்டனிடம் மொரீஷியஸ் கேட்டு வருகிறது.

அதற்கு இதுவரை ஆதரவு அளித்த இந்தியா, அமெரிக்க கடற்படை தளம் தொடர்ந்து அங்கே இருந்தால் தான், சீனாவின் ஆதிக்கம் எல்லைமீறாமல் தடுக்க முடியும் என்ற வகையில் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.

நேற்று கையெழுத்தான ஒப்பந்தங்களிலோ, தலைவர்களின் பேட்டிகளிலோ ராணுவ ரீதியான இந்த விஷயங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

எனினும், சீனாவின் அசுர வளர்ச்சி உலகத்துக்கு நல்லதல்ல என்று நம்பும் மேலை நாடுகளின் எதிர்கால திட்டங்களுக்கு மோடியின் நடவடிக்கை பலம் சேர்க்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மற்றபடி, 100 கோடி ரூபாயில் இந்தியாவின் உதவியுடன் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மொரீஷியசில் செயல்படுத்தப்படும்; புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்ட இந்தியா உதவும்; அதன் கடலோர காவல்படைக்கு பயிற்சி அளிக்கும் என்பதை போன்ற சம்பிரதாயமான உறுதிகளும் வழங்கப்பட்டன.

மொரீஷியஸ் சுதந்திர தின விழாவில், இந்திய கடற்படையின் போர்க்கப்பல் மற்றும் இந்திய விமானப்படையின் ஆகாஷ் கங்கா ஸ்கைடைவிங் குழுவும், ஆயுதப்படைகளின் குழுவும் பங்கேற்றன.

1மொரீஷியஸ் மத்திய வங்கி – இந்திய ரிசர்வ் வங்கி இடையே உள்ளூர் நாணய தீர்வு முறை

2மத்திய நீர் ஆணையத்தின் குழாய் மாற்று திட்டத்திற்கு நிதியளிக்க மொரீஷியஸ் அரசு – இந்திய ஸ்டேட் வங்கி இடையே கடன் வசதி

3இந்திய வெளியுறவு அமைச்சகம் – மொரீஷியஸ் வெளியுறவு அமைச்சகம் இடையே பயிற்சி

4இந்திய கடற்படை – மொரீஷியஸ் கடற் படை இடையே கப்பல் போக்குவரத்து தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் தொழில்நுட்பம்

5மொரீஷியஸ் நிதி குற்றவியல் ஆணையம் – இந்தியாவின் அமலாக்க இயக்குநரகம் இடையே ஒத்துழைப்பு

6மொரீஷியஸ் தொழில் மற்றும் கூட்டுறவு அமைச்சகம் – இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சகம் இடையே புரிந்துணர்வு

7மொரீஷியஸ் பொது சேவை அமைச்சகம் – இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையம் இடையே அதிகாரிகளுக்கு பயிற்சி

8இந்தியாவின் தேசிய கடல் தகவல் சேவை மையம் – மொரீஷியஸ் கடல்சார் மண்டல நிர்வாகம் மற்றும் ஆய்வுத் துறைக்கு இடையே ஒத்துழைப்பு.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்� ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி� ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

பட்ஜெட்டில் ரூபாய் குறியீடு மா� ...

பட்ஜெட்டில் ரூபாய் குறியீடு மாற்றம் – அண்ணாமலை எதிர்ப்பு நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் தொடர்பான முன்னோட்ட ...

பிரிவினைவாத உணர்வை பரப்பும் ஆப� ...

பிரிவினைவாத உணர்வை பரப்பும் ஆபத்தான மனநிலை – நிர்மலா சீதாராமன் ரூபாய் குறியீடு மாற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் ...

உ.பி -யில் நடப்பட்டுள்ள 210 கோடி மர ...

உ.பி -யில் நடப்பட்டுள்ள 210 கோடி மரங்கள் – முதல்வர் யோகி ஆதித்யநாத் நாத் பெருமிதம் கடந்த 8 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 210 கோடி ...

வெற்றிலைரமாக பிரிக்கப்பட்ட ஸ்� ...

வெற்றிலைரமாக பிரிக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் விண்கலங்கள் – இஸ்ரோ 'ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் விண்ணில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. இது தொடர்பாக ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...