மோடி அரசின் முயற்சிகளால் வெளிநாடுகளில் இருந்து 10,000 இந்தியர்கள் விடுதலை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இந்தியகைதிகள் 500 பேருக்கு ஐக்கியஅரபு அமீரக அரசு மன்னிப்பு வழங்கியுள்ளது. யுஏஇ அரசின் இந்தமுடிவு, யுஏஇ – இந்தியா இடையிலான நெருக்கமான ராஜந்திரஉறவை நிரூபிக்கிறது.

இந்த வெற்றிகரமான முயற்சிகள் இந்தியாவின் வளர்ந்துவரும் உலகளாவிய ராஜதந்திர அந்தஸ்தையும், வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களை பாதுகாப்பதில் மோடிஅரசின் இடைவிடாத அர்ப்பணிப்பையும் காட்டுகின்றன. இவ்வாறு அந்தஅதிகாரி கூறினார்.

பிரதமர் மோடி அரசின் ராஜந்திரமுயற்சியால் இந்திய குடிமக்கள் விடுவிக்கப்பட்ட முக்கிய நிகழ்வுகள் வருமாறு: கடந்த 2022 முதல் யுஏஇ நாட்டில் இருந்து 2,783 இந்தியகைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபிய பட்டத்துஇளவரசர் முகமது பின் சல்மான் கடந்த 2019-ல் தனது இந்திய பயணத்தின்போது 850 இந்திய கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டார்.

2023-ல் கத்தாரில் இருந்து இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை செய்யபட்டனர். ஈரான் அரசு கடந்த 2024-ல் 77 இந்தியர்களையும், 2023-ல் 12 மீனவர்கள் உள்ளிட்ட 43 இந்தியர்களை விடுவித்தது.

2019-ல் பிரதமர் மோடியின் வருகையின்போது பஹ்ரைன் 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு வழங்கியது. 2017-ல் குவைத் அமீர் 22 இந்தியர்களை விடுவித்தார். 97 பேருக்கு தண்டனைகளை குறைத்தார்.

மத்திய அரசின் தொடர்முயற்சிகள் காரணமாக இலங்கை அரசு கடந்த 2014 முதல் 3,697 இந்திய மீனவர்களை விடுதலை செய்துள்ளது. இதுபோல் பாகிஸ்தான் கடந்த 2014 முதல் 2,638 இந்திய மீனவர்களையும் 71 இந்திய கைதிகளையும் விடுதலை செய்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...