பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சரவையின் நியமனக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நியமனம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் (DoPT) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
* 2014ம் ஆண்டு பேட்ச் ஐ.எப்.எஸ்., அதிகாரியான நிதி திவாரி, தற்போது பிரதமர் அலுவலகத்தில் துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
* இவர் பிரதமர் மோடியின் லோக்சபா தொகுதியான வாரணாசியின் மஹ்மூர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்.
* தற்போது பிரதமர் அலுவலகத்தில் துணைச் செயலாளராகப் பணியாற்றுகிறார்.
* திவாரி தனது தற்போதைய பதவியில் இருந்து பிரதமர் அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார். அவரது பதவிக்காலம் தற்போதைய நிர்வாகத்தின் காலத்துடன் அல்லது மேலும் உத்தரவுகள் வழங்கப்படும் வரை நீடிக்கும்.
* சிவில் சர்வீசஸ் தேர்வில் 96 வது இடத்தைப் பிடித்த திவாரி, இந்திய வெளியுறவுப் பணியில் சேருவதற்கு முன்பு வாரணாசியில் உதவி ஆணையராகப் பணியாற்றினார்.
* 2022ம் ஆண்டு துணைச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, ஜனவரி 6, 2023 முதல் பிரதமர் அலுவலகத்தில் துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
* பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிவதற்கு முன்பு, அவர் வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றினார்.
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |