வாரணாசிக்கு ஓராண்டில் 10 கோடிக்கும் அதிகமானபக்தர்கள் வருகை

பிரதமர் மோடியின் தீவிரமுயற்சிகளால் அவரது சொந்ததொகுதியான வாரணாசியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக வாரணாசியின் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் ரூ.339 கோடியில் விரிவாக்கம்செய்யப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இந்தகோயிலை ஒட்டியுள்ள 40-க்கும் மேற்பட்டகோயில்கள் அழகுபடுத்தப் பட்டன. வாரணாசியின் கங்கைநதி படித்துறைகள் புனரமைக்கப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது கோயில்வளாகம் பிரம்மாண்டம் ஆக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வாரணாசிக்கு வரும்பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் அவர் பேசியதாவது:

சிராவண மாதத்தில் 12 ஜோதிர் லிங்கங்களுக்கு பக்தர்கள் புனிதபயணம் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக வாரணாசி, அயோத்தி, மதுரா, உஜ்ஜைன் உள்ளிட்ட புனிதத் தலங்களில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

குறிப்பாக வாரணாசிக்கு ஓராண்டில் 10 கோடிக்கும் அதிகமானபக்தர்கள் வருகை தருகின்றனர். இதன்மூலம் அந்த நகரின் பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த 2 பேர், சுவாமி விவேகானந்தரின் போதனை களால் ஈர்க்கப்பட்டு அண்மையில் அமர்நாத் புனிதயாத்திரை மேற்கொண்டனர். அனைத்து தரப்பினரையும் இந்தியா அரவணைக்கிறது. இது நமது நாட்டின் தனிச்சிறப்பு. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...