எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம்

”சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது” என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பஹல்காம் சம்பவத்திற்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்துார்’ என்ற பெயரில், நம் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்தனர். இதற்கிடையே கடந்த 10ம் தேதி, இருதரப்பிலும் போர்நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இருநாடுகளின் டி.ஜி.எம்.ஓ., எனப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல்கள் நேற்று பேச்சு நடத்தினர். அப்போது, இருதரப்பிலும் போர் நிறுத்த நடவடிக்கைகளை சுமூகமாக கடைப்பிடிப்பது குறித்து ஆலோசனை நடந்தது.

தற்போது ஜம்மு-காஷ்மீர் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

நேற்று இரவு சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை என்பதை இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ”எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. இருப்பினும், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர்” என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...