புதினாவின் மருத்துவக் குணம்

 இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், குழம்பு முதலியவைகளில் கறிவேப்பிலையைப் போல வாசனைக்காகப் போடுவது வழக்கம். துவையல் செய்து உண்ணலாம். வாயுவைப் போக்கும். பசி உண்டாகும். அஜீரணத்தை மாற்றும். தீனிப்பைக்கும், குடலுக்கும் வலிவு கொடுக்கும். விக்கல், குமட்டல் நீக்கியாகவும், மாதவிடாயை ஒழுங்கு படுத்தியாகவும் செயல்படுகிறது.

தேவையான அளவு புதினாக் கீரையை எடுத்து உலர்த்தி இடித்துத் தூள் செய்து காலை, மாலை பல் துலக்கிவர சகல பல் கோளாறுகளும் குணமாகும். தேவையானால் எட்டில் ஒரு பங்கு உப்புச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

ஒரு சிலருக்கு பித்தம் காரணமாக அடிக்கடி குமட்டல் ஏற்படும். ஆனால் வாந்தி வராது. இதற்கு ஒரு கைப்பிடியளவு புதினாக் கீரை எடுத்து சட்டியிலிட்டு பாக்களவு இஞ்சித் துண்டும், 10 மிளகும் நைத்துப்போட்டு கீரையை வதக்கி 200 மி.லி தண்ணீர்விட்டு 100 மி.லியாக சுண்டக்காய்ச்சி 50 கிராம் பனைவெல்லம் சேர்த்து குமட்டல் வரும் சமயம் கொஞ்சம் கொடுத்துவர குமட்டல் குணமாகும்.

புதினாக் கீரையை கைப்பிடி அளவு எடுத்து ஒரு சட்டியிலிட்டு காலிட்டர் தண்ணீர்விட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி வேளைக்கு ஒரு சங்களவு காலை, மதியம், மாலையாகக் கொடுத்து வர வயிற்றுப்போக்கு, வாந்தி நின்றுவிடும்.

புதினாக் கீரையை எடுத்து வெயிலில் உலர்த்தி இடித்து சூரணமாக்கி காலை, மதியம், மாலையாக அரைத்தேக்கரண்டி சூரணத்தை தேனில் குலைத்துக் கொடுக்க தடைபட்ட மாதவிடாய் ஒழுங்காக வெளியேறும்.

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...