புதினாவின் மருத்துவக் குணம்

 இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், குழம்பு முதலியவைகளில் கறிவேப்பிலையைப் போல வாசனைக்காகப் போடுவது வழக்கம். துவையல் செய்து உண்ணலாம். வாயுவைப் போக்கும். பசி உண்டாகும். அஜீரணத்தை மாற்றும். தீனிப்பைக்கும், குடலுக்கும் வலிவு கொடுக்கும். விக்கல், குமட்டல் நீக்கியாகவும், மாதவிடாயை ஒழுங்கு படுத்தியாகவும் செயல்படுகிறது.

தேவையான அளவு புதினாக் கீரையை எடுத்து உலர்த்தி இடித்துத் தூள் செய்து காலை, மாலை பல் துலக்கிவர சகல பல் கோளாறுகளும் குணமாகும். தேவையானால் எட்டில் ஒரு பங்கு உப்புச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

ஒரு சிலருக்கு பித்தம் காரணமாக அடிக்கடி குமட்டல் ஏற்படும். ஆனால் வாந்தி வராது. இதற்கு ஒரு கைப்பிடியளவு புதினாக் கீரை எடுத்து சட்டியிலிட்டு பாக்களவு இஞ்சித் துண்டும், 10 மிளகும் நைத்துப்போட்டு கீரையை வதக்கி 200 மி.லி தண்ணீர்விட்டு 100 மி.லியாக சுண்டக்காய்ச்சி 50 கிராம் பனைவெல்லம் சேர்த்து குமட்டல் வரும் சமயம் கொஞ்சம் கொடுத்துவர குமட்டல் குணமாகும்.

புதினாக் கீரையை கைப்பிடி அளவு எடுத்து ஒரு சட்டியிலிட்டு காலிட்டர் தண்ணீர்விட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி வேளைக்கு ஒரு சங்களவு காலை, மதியம், மாலையாகக் கொடுத்து வர வயிற்றுப்போக்கு, வாந்தி நின்றுவிடும்.

புதினாக் கீரையை எடுத்து வெயிலில் உலர்த்தி இடித்து சூரணமாக்கி காலை, மதியம், மாலையாக அரைத்தேக்கரண்டி சூரணத்தை தேனில் குலைத்துக் கொடுக்க தடைபட்ட மாதவிடாய் ஒழுங்காக வெளியேறும்.

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...