புதினாவின் மருத்துவக் குணம்

 இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், குழம்பு முதலியவைகளில் கறிவேப்பிலையைப் போல வாசனைக்காகப் போடுவது வழக்கம். துவையல் செய்து உண்ணலாம். வாயுவைப் போக்கும். பசி உண்டாகும். அஜீரணத்தை மாற்றும். தீனிப்பைக்கும், குடலுக்கும் வலிவு கொடுக்கும். விக்கல், குமட்டல் நீக்கியாகவும், மாதவிடாயை ஒழுங்கு படுத்தியாகவும் செயல்படுகிறது.

தேவையான அளவு புதினாக் கீரையை எடுத்து உலர்த்தி இடித்துத் தூள் செய்து காலை, மாலை பல் துலக்கிவர சகல பல் கோளாறுகளும் குணமாகும். தேவையானால் எட்டில் ஒரு பங்கு உப்புச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

ஒரு சிலருக்கு பித்தம் காரணமாக அடிக்கடி குமட்டல் ஏற்படும். ஆனால் வாந்தி வராது. இதற்கு ஒரு கைப்பிடியளவு புதினாக் கீரை எடுத்து சட்டியிலிட்டு பாக்களவு இஞ்சித் துண்டும், 10 மிளகும் நைத்துப்போட்டு கீரையை வதக்கி 200 மி.லி தண்ணீர்விட்டு 100 மி.லியாக சுண்டக்காய்ச்சி 50 கிராம் பனைவெல்லம் சேர்த்து குமட்டல் வரும் சமயம் கொஞ்சம் கொடுத்துவர குமட்டல் குணமாகும்.

புதினாக் கீரையை கைப்பிடி அளவு எடுத்து ஒரு சட்டியிலிட்டு காலிட்டர் தண்ணீர்விட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி வேளைக்கு ஒரு சங்களவு காலை, மதியம், மாலையாகக் கொடுத்து வர வயிற்றுப்போக்கு, வாந்தி நின்றுவிடும்.

புதினாக் கீரையை எடுத்து வெயிலில் உலர்த்தி இடித்து சூரணமாக்கி காலை, மதியம், மாலையாக அரைத்தேக்கரண்டி சூரணத்தை தேனில் குலைத்துக் கொடுக்க தடைபட்ட மாதவிடாய் ஒழுங்காக வெளியேறும்.

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...