தீவிரவாத அமைப்புகளுக்கு ஊக்கம் தருவது போல ராகுலின் கருத்து உள்ளது; பா ஜ க

விக்கிலீக்ஸ் வெப்சைட் வெளியிட்டுள்ள அமெரிக்க வெளியுறவு துறை தொடர்பான ரகசிய ஆவணங்களில்;- லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகளை விட, பழமைவாத இந்து அமைப்புகளினுடைய வளர்ச்சியால் நாட்டின்னுடைய பாதுகாப்புக்கு ஆபத்து உள்ளது’ என்று அமெரிக்க தூதர் திமோதிரோமெரிடம் ராகுல் காந்தி கூறிய கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது , இதற்கு பா.ஜ., மற்றும் ஆர்.எஸ். எஸ். அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து பாரதிய ஜனத்த கடும் கண்டனம் தெரிவித்துள்ளது , தனது அறிக்கையில் தெரிவித்ததாவது;

நாட்டில் மதம் தொடர்பான பிரச்னையை உருவாக்க காங்கிரஸ் விரும்புகிறது. அதன் மூலம் தேர்தல் ஆதாயம் பெற நினைக்கிறது. எனவே தான் ராகுல் காந்தி இப்படிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்’ என்று , பா ஜ க கூறியுள்ளது.

இது குறித்து பா ஜ க வின் தகவல் தொடர்பாளர் தருண் விஜய் கூறியதாவது  , “ஊழல் மற்றும் விலைவாசி-உயர்வு பிரச்னையால் காங்கிரஸ்* கட்சியினர் விரக்தியில் உள்ளனர். தேர்தலில் தோற்று விடுவோமோ என்று அஞ்சுகின்றனர். அதனால் தான் இந்து அமைப்புகள் மீது குற்றம் சுமத்துகின்றனர் . இது அவர்களினுடைய பழைய தந்திரம்’ என்றார். “

பா.ஜ.க வின் மற்றொரு தகவல் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது

ராகுல் காந்தியின் கருத்து பொறுப்பற்றதாக உள்ளது . மும்பை தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதல்களை, பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய மண்ணில் நடத்திய பிறகும், ராகுல் இப்படி பேசுகிறார் எனில், இந்தியா மற்றும் அதன் பிரச்னை பற்றி ராகுல்லுக்கு விபரம் தெரியவில்லை என்று அர்த்தம்,   பாகிஸ்தான்  மண்ணில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஊக்கம் தருவது போல ராகுலின் கருத்து உள்ளது,” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களி ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களில் ரூ.7,000 கோடி முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) அதன் துணை ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தா ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (16.07.2025) ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: ந ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: நயினார் நாகேந்திரன் ஆதரவு 'தேர்தல் நேரத்தில், நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப் ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப்பு வளர்க்கவில்லை: தமிழிசை ''காவிதான் தமிழை வளர்த்தது. கருப்பு வளர்க்கவில்லை,'' என, ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்த ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மையமாக கல்வி இருக்க வேண்டும் என்று அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார் நமது நாடு வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நமது முதன்மைக் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...