தீவிரவாத அமைப்புகளுக்கு ஊக்கம் தருவது போல ராகுலின் கருத்து உள்ளது; பா ஜ க

விக்கிலீக்ஸ் வெப்சைட் வெளியிட்டுள்ள அமெரிக்க வெளியுறவு துறை தொடர்பான ரகசிய ஆவணங்களில்;- லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகளை விட, பழமைவாத இந்து அமைப்புகளினுடைய வளர்ச்சியால் நாட்டின்னுடைய பாதுகாப்புக்கு ஆபத்து உள்ளது’ என்று அமெரிக்க தூதர் திமோதிரோமெரிடம் ராகுல் காந்தி கூறிய கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது , இதற்கு பா.ஜ., மற்றும் ஆர்.எஸ். எஸ். அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து பாரதிய ஜனத்த கடும் கண்டனம் தெரிவித்துள்ளது , தனது அறிக்கையில் தெரிவித்ததாவது;

நாட்டில் மதம் தொடர்பான பிரச்னையை உருவாக்க காங்கிரஸ் விரும்புகிறது. அதன் மூலம் தேர்தல் ஆதாயம் பெற நினைக்கிறது. எனவே தான் ராகுல் காந்தி இப்படிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்’ என்று , பா ஜ க கூறியுள்ளது.

இது குறித்து பா ஜ க வின் தகவல் தொடர்பாளர் தருண் விஜய் கூறியதாவது  , “ஊழல் மற்றும் விலைவாசி-உயர்வு பிரச்னையால் காங்கிரஸ்* கட்சியினர் விரக்தியில் உள்ளனர். தேர்தலில் தோற்று விடுவோமோ என்று அஞ்சுகின்றனர். அதனால் தான் இந்து அமைப்புகள் மீது குற்றம் சுமத்துகின்றனர் . இது அவர்களினுடைய பழைய தந்திரம்’ என்றார். “

பா.ஜ.க வின் மற்றொரு தகவல் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது

ராகுல் காந்தியின் கருத்து பொறுப்பற்றதாக உள்ளது . மும்பை தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதல்களை, பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய மண்ணில் நடத்திய பிறகும், ராகுல் இப்படி பேசுகிறார் எனில், இந்தியா மற்றும் அதன் பிரச்னை பற்றி ராகுல்லுக்கு விபரம் தெரியவில்லை என்று அர்த்தம்,   பாகிஸ்தான்  மண்ணில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஊக்கம் தருவது போல ராகுலின் கருத்து உள்ளது,” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...