காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர்க்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் நேற்று வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களிடம் பேசும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை குறிப்பிட்டு, ஜம்மு-காஷ்மீர் மீதான தனது நாட்டின் நீண்ட கால கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
இதற்கு இன்று கடும் எதிர்ப்பை தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகம் அறிக்கை:
வெளிநாட்டினர் எப்படி நமது கழுத்து நரம்புக்குள் இருக்க முடியும்? இது இந்தியாவின் யூனியன் பிரதேசம். பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில் எந்த சர்ச்சையும் இல்லை.
பாகிஸ்தான் சட்டவிரோதமாக கைப்பற்றிய கில்ஜிட்- பல்திஸ்தானில் மனித உரிமை மீறல்களை சரி செய்ய வேண்டும்.
பாகிஸ்தான் தனது ஆக்கிரமிப்பு கருத்துக்களை நிறுத்தி, பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் கூறியுள்ளது.
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |