பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கண்டனம்

காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர்க்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் நேற்று வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களிடம் பேசும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை குறிப்பிட்டு, ஜம்மு-காஷ்மீர் மீதான தனது நாட்டின் நீண்ட கால கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கு இன்று கடும் எதிர்ப்பை தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகம் அறிக்கை:

வெளிநாட்டினர் எப்படி நமது கழுத்து நரம்புக்குள் இருக்க முடியும்? இது இந்தியாவின் யூனியன் பிரதேசம். பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும்.

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில் எந்த சர்ச்சையும் இல்லை.

பாகிஸ்தான் சட்டவிரோதமாக கைப்பற்றிய கில்ஜிட்- பல்திஸ்தானில் மனித உரிமை மீறல்களை சரி செய்ய வேண்டும்.

பாகிஸ்தான் தனது ஆக்கிரமிப்பு கருத்துக்களை நிறுத்தி, பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் கூறியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

புதல்வருக்கு மட்டுமே முதல்வர் � ...

புதல்வருக்கு மட்டுமே முதல்வர் கனவு இருக்க வேண்டுமா – தமிழிசை கேள்வி வைகோ போன்றோர் ஈழப் பிரச்னை நடந்தபோது ஒரு மாதிரி ...

‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் � ...

‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடியவில்லை; மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ''ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை'' என்று மத்திய அமைச்சர் ...

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஏவுகணை� ...

பஞ்சாபில் பாகிஸ்தானின் ஏவுகணையை சுக்குநூறாக்கியது இந்தியா பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையை இடைமறித்து இந்தியா ...

பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப ...

பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு டில்லியில் பிரதமர் மோடியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் ...

மிகவும் துல்லியமான தாக்குதல் R ...

மிகவும் துல்லியமான தாக்குதல் – சசி தரூர் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகள் கூடாரங்களை தாக்கி ...

பயங்கரவாதிகளின் முகாம்களை நிர� ...

பயங்கரவாதிகளின் முகாம்களை நிர்மூலமாக்கிய பிரதமர் மோடிக்கு பாராட்டு 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக, பயங்கரவாதிகளின்முகாம்களைநிர்மூலமாக்கிய பிரதமர் மோடிக்கு பாராட்டு ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.