மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

 மஞ்சள் காமாலைக்கு சித்த மருத்துவ சிகிச்சை குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, மாமிசம், புகைப்பழக்கம், போதை பொருட்களால் முதலில் பாதிக்கப்படுவது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியன. இவற்றின் செயல்திறன் குறையும்போது இரத்தம் வலிமை குன்றி நோய் எதிர்ப்புச் சக்தி நாளுக்கு நாள் பலமிழந்து இரத்தசோகை ஏற்படுகிறது. இந்தக் கட்டத்தில்தான் எல்லாவித வைர°களும் சுறுசுறுப்படைந்து இரத்தத்தில் கலந்து இரத்தத்தின்

இயல்புகளை சிதைக்கின்றன. அவ்வாறு சிதைவு அடையும் இரத்தம், பல நோய்களுக்கு வழிவிடுகிறது. அவற்றுள் ஒன்றுதான் ‘மஞ்சள் காமாலை’. முதலில் இரத்த சோகை, பசியின்மை, ருசியின்மை, கண் பார்வை மங்கல் மேனி வெளுத்தல், உடல் உஷ்ணமடைதல், தோல் வற்றிப் போதல், கை கால் வலி, அசதி, மலம் வெளுத்துப் போதல், சிறுநீர் எரிச்சலுடன் மஞ்சளாகப் போதல் எனப் படிப்படியே காமாலை நோய்க் குறிகள் தென்படும். இந்தக் கட்டத்தில் உடனடியாக சிறுநீரையும், இரத்தத்தையும் சோதித்தால் காமாலையின் தாக்குதல் எந்த நிலையில் உள்ளது என கண்டறியலாம்.

 மஞ்சள் காமாலை

இத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டியது Hbs Ag எனும் B-virus காமாலை மற்றும் C-virus காமாலை ஆகும். Bilirubin 2க்கு மேல் இருக்குமேயானால் காமாலை அதி விரைவாக வளர்கிறது என்று அர்த்தம். அதேபோல் SGOT, SGPT, Alkaline Phosphate 100க்கு மேல் செல்லுமானால் காமாலை தீவிரமடைகிறது என்று பொருள். உடனடியாக எல்லாவிதமான நார்மல் உணவுகளை நிறுத்திவிட்டு உப்பில்லாத மோர்சாதம், இளநீர், கஞ்சி மட்டும் சாப்பிட்டு காலை-மாலை கீழாநெல்லி செடியை வேருடன் பிடுங்கி அலசி அதில் வெந்தயம் கால் °பூன் சேர்த்தரைத்து மோருடன் சாப்பிட வேண்டும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைகளை காலை – பகல் இருவேளை 10 இலைகளைப் பறித்து வெந்நீரில் அலசி அப்படியே மென்று சாப்பிட வேண்டும். சித்த மருத்துவத்தில் திரிபலா சூரணம், தாளிசாதி சூரணம், ஏலாதி சூரணம் என்று சில சூரணங்கள் உண்டு. இவற்றை மாத்திரை வடிவிலும் பெறலாம். காலை-மாலை-இரவு இவற்றை கால் °பூன் வீதம் சர்க்கரையுடன் கலந்து சாப்பிட வேண்டும். மாத்திரை என்றால் 2 மாத்திரை வீதம் சாப்பிடலாம். அதாவது காலையில் ஏலாதி சூரணம் கால் °பூன், மாலையில் தாளிசாதி சூரணம், இரவில் திரிபலா சூரணம். இப்படி தினசரி சாப்பிட்டு உப்பில்லா பத்தியம் 1 வாரம் இருக்கவும். பழங்கள், காய்கறிகள், கீரைகள், ஊறுகாய், பட்சணங்களைக் குறைந்தது 15 நாட்களுக்குச் சாப்பிடக் கூடாது. வெந்நீரை ஆறவைத்துப் பருகவும்.

பாத்ரூமை உடனடியாகக் கழுவவும். பசிக்கும் போதெல்லாம் உப்பில்லாத அரிசி நொய் கஞ்சி, பார்லி கஞ்சி, கோதுமை ரவை கஞ்சி, மோர் சாதம், இளநீர் போன்றவற்றை பகலிலும், இரவில் பால் சாதம், பால் மட்டும் சாப்பிடலாம். தேவையானால் சர்க்கரை சேர்க்கலாம். வாரம் 1 நாள் மீண்டும் சிறுநீர் இரத்தத்தைச் சோதித்தால் எல்லாம் பாதி அளவு குறைந்திருக்கும். இதே உணவு மருந்துகளை மேலும் 1 வாரம் நீடித்தால் காமாலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். அதற்குப்பின் 1 மாதம் வேகவைத்த உணவுடன் உப்பு பாதி அளவு மட்டும் சேர்த்து சாப்பிட்டு வரவும். இறுதியாக ஒருமுறை காமாலைக்கான இரத்தம், சிறுநீர் சோதிக்கவும். எல்லாம் நார்மலாக இருக்குமேயானால் படிப்படியாகப் பொறியல், அவியல், வறுவல் சேர்க்கலாம். 6 மாதம் கழித்து அசைவ உணவு சேர்க்கலாம்.

B-virus, C-virus (Hbs Ag Positive) காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை பாதி உப்பு, சைவ உணவு என்று பத்தியமுடன் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை பெற்றுவர அவை negative ஆக மாற வாய்ப்புண்டு.

மஞ்சள் காமாலை, மஞ்சள்காமாலை

One response to “மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...