மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

 மஞ்சள் காமாலைக்கு சித்த மருத்துவ சிகிச்சை குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, மாமிசம், புகைப்பழக்கம், போதை பொருட்களால் முதலில் பாதிக்கப்படுவது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியன. இவற்றின் செயல்திறன் குறையும்போது இரத்தம் வலிமை குன்றி நோய் எதிர்ப்புச் சக்தி நாளுக்கு நாள் பலமிழந்து இரத்தசோகை ஏற்படுகிறது. இந்தக் கட்டத்தில்தான் எல்லாவித வைர°களும் சுறுசுறுப்படைந்து இரத்தத்தில் கலந்து இரத்தத்தின்

இயல்புகளை சிதைக்கின்றன. அவ்வாறு சிதைவு அடையும் இரத்தம், பல நோய்களுக்கு வழிவிடுகிறது. அவற்றுள் ஒன்றுதான் ‘மஞ்சள் காமாலை’. முதலில் இரத்த சோகை, பசியின்மை, ருசியின்மை, கண் பார்வை மங்கல் மேனி வெளுத்தல், உடல் உஷ்ணமடைதல், தோல் வற்றிப் போதல், கை கால் வலி, அசதி, மலம் வெளுத்துப் போதல், சிறுநீர் எரிச்சலுடன் மஞ்சளாகப் போதல் எனப் படிப்படியே காமாலை நோய்க் குறிகள் தென்படும். இந்தக் கட்டத்தில் உடனடியாக சிறுநீரையும், இரத்தத்தையும் சோதித்தால் காமாலையின் தாக்குதல் எந்த நிலையில் உள்ளது என கண்டறியலாம்.

 மஞ்சள் காமாலை

இத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டியது Hbs Ag எனும் B-virus காமாலை மற்றும் C-virus காமாலை ஆகும். Bilirubin 2க்கு மேல் இருக்குமேயானால் காமாலை அதி விரைவாக வளர்கிறது என்று அர்த்தம். அதேபோல் SGOT, SGPT, Alkaline Phosphate 100க்கு மேல் செல்லுமானால் காமாலை தீவிரமடைகிறது என்று பொருள். உடனடியாக எல்லாவிதமான நார்மல் உணவுகளை நிறுத்திவிட்டு உப்பில்லாத மோர்சாதம், இளநீர், கஞ்சி மட்டும் சாப்பிட்டு காலை-மாலை கீழாநெல்லி செடியை வேருடன் பிடுங்கி அலசி அதில் வெந்தயம் கால் °பூன் சேர்த்தரைத்து மோருடன் சாப்பிட வேண்டும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைகளை காலை – பகல் இருவேளை 10 இலைகளைப் பறித்து வெந்நீரில் அலசி அப்படியே மென்று சாப்பிட வேண்டும். சித்த மருத்துவத்தில் திரிபலா சூரணம், தாளிசாதி சூரணம், ஏலாதி சூரணம் என்று சில சூரணங்கள் உண்டு. இவற்றை மாத்திரை வடிவிலும் பெறலாம். காலை-மாலை-இரவு இவற்றை கால் °பூன் வீதம் சர்க்கரையுடன் கலந்து சாப்பிட வேண்டும். மாத்திரை என்றால் 2 மாத்திரை வீதம் சாப்பிடலாம். அதாவது காலையில் ஏலாதி சூரணம் கால் °பூன், மாலையில் தாளிசாதி சூரணம், இரவில் திரிபலா சூரணம். இப்படி தினசரி சாப்பிட்டு உப்பில்லா பத்தியம் 1 வாரம் இருக்கவும். பழங்கள், காய்கறிகள், கீரைகள், ஊறுகாய், பட்சணங்களைக் குறைந்தது 15 நாட்களுக்குச் சாப்பிடக் கூடாது. வெந்நீரை ஆறவைத்துப் பருகவும்.

பாத்ரூமை உடனடியாகக் கழுவவும். பசிக்கும் போதெல்லாம் உப்பில்லாத அரிசி நொய் கஞ்சி, பார்லி கஞ்சி, கோதுமை ரவை கஞ்சி, மோர் சாதம், இளநீர் போன்றவற்றை பகலிலும், இரவில் பால் சாதம், பால் மட்டும் சாப்பிடலாம். தேவையானால் சர்க்கரை சேர்க்கலாம். வாரம் 1 நாள் மீண்டும் சிறுநீர் இரத்தத்தைச் சோதித்தால் எல்லாம் பாதி அளவு குறைந்திருக்கும். இதே உணவு மருந்துகளை மேலும் 1 வாரம் நீடித்தால் காமாலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். அதற்குப்பின் 1 மாதம் வேகவைத்த உணவுடன் உப்பு பாதி அளவு மட்டும் சேர்த்து சாப்பிட்டு வரவும். இறுதியாக ஒருமுறை காமாலைக்கான இரத்தம், சிறுநீர் சோதிக்கவும். எல்லாம் நார்மலாக இருக்குமேயானால் படிப்படியாகப் பொறியல், அவியல், வறுவல் சேர்க்கலாம். 6 மாதம் கழித்து அசைவ உணவு சேர்க்கலாம்.

B-virus, C-virus (Hbs Ag Positive) காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை பாதி உப்பு, சைவ உணவு என்று பத்தியமுடன் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை பெற்றுவர அவை negative ஆக மாற வாய்ப்புண்டு.

மஞ்சள் காமாலை, மஞ்சள்காமாலை

One response to “மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...