தலைநகரின் உச்சத்தை தொட்ட மோடியின் புகழ்

 தலைநகரின் உச்சத்தை தொட்ட மோடியின் புகழ் டெல்லி ஸ்ரீராம் கல்லூரி மாணவர்களிடையே நடந்த வாக்கெடுப்பின் மூலம் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் புகழ் பாரதத்தின் தலைநகரிலேயே உச்சத்தை தொட்டுவிட்டது

ஸ்ரீராம் கல்லூரி வருடம் வருடம் வர்த்தக மாநாட்டை நடத்துவதும், அதில் கலந்துகொள்ள உள்ள முக்கிய விருந்தினரை மாணவர்களிடையே வாக்கெடுப்பை நடத்தி தேர்ந்தெடுப்பதும் வாடிக்கை.

இந்நிலையில் இந்த வருடத்துக்கான கூட்டத்துக்கு யாரை அழைக்கலாம் என மாணவர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. இந்த வாக்கெடுப்பு பட்டியலில் நரேந்திர மோடி. மத்திய அமைச்சர்கள் ஐந்து பேர் மேலும் ராகுல் காந்தி, ரத்தன் டாட்டா உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

இதில் நரேந்திர மோடி பெருவாரியான மாணவர்களின் ஆதரவை பெற்று முதலிடத்தையும் . ரத்தன் டாட்டா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளார். இதில் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

"கல்லூரி மாணவர்கள் அமைப்பு 10-15 முக்கிய நபர்களுக்கு அழைப்பு கடிதத்தை அனுப்பியது. இதில் குஜராத் முதல்வரே முதலில் தொடர்புகொண்டு சம்மதம் தெரிவித்தார், அதுவும் கடிதம் அனுப்பிய மூன்றாம் நாளே. பேச்சாளர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ஜனநாயக முறைப்படியே நடந்தது" கல்லூரி முதல்வர் பி.சி.ஜெய்ன்

எது எப்படியோ இந்தியாவின் தலைநகரில் அமைந்துள்ள தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றான ஸ்ரீராம் கல்லூரிக்குள் பெருவாரியான மாணவர்களின் ஆதரவை பெற்று நுழையும் நரேந்திர மோடி, சற்றே கொஞ்சம் அருகில் அமைந்துள்ள பாராளுமன்றத்துக்குள் பிரதமராக நுழையும் காலம் வெகு தூரத்தில் இல்லை. பெருவாரியான மாணவர்களின் எண்ணங்களும் , பெருவாரியான பாரத மக்களின் எண்ணங்களும் ஒன்றாக இருக்கும் என்றே நம்ம்புவோம்.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.