நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவகல்லூரி என்ற நிலை உருவாக்கப்படும் – அமித்ஷா

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நிலை உருவாக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.

ஹரியானா மாநிலம் ஹிசாரில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிலை திறப்பு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;

10 ஆண்டுகளில் அனைத்து துறைகளில் முன்னேற்றங்களை கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு கொண்டு வந்து, நடைமுறைப்படுத்தி உள்ளது, நாடு முழுவதும் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

10 ஆண்டுகளுக்கு முன்பாக நாடு முழுவதும் 7 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இதில் 6 கல்லூரிகள் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் உருவாக்கப்பட்டவை. தற்போது 23 எய்ம்ஸ் மருத்துவமனைகள் நாடு முழுவதும் உள்ளன.

தற்போது நாட்டில் 750 மாவட்டங்களில் 766 மருத்துவமனைகள் இருக்கின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற நிலை உருவாக்கப்படும்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் 4 கோடி வீடுகள் கட்டப்பட்டு, 20 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் அமித் ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.ம ...

தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு பொய்யான வாக்குறுதிகள் கொடுத்துத் விவசாயிகளை ஏமாற்றி வரும் தி.மு.க., ...

மோடி வேண்டும் என சொல்லும் பாகிஸ ...

மோடி வேண்டும் என சொல்லும் பாகிஸ்தானியர் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை சுமூகமான சூழலில் கொண்டுசெல்ல ...

எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் ...

எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் போராளி பிரதமர் மோடி – நடிகர் ரஜினிகாந்த் 'பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது; மோடி ஜம்மு-காஷ்மீருக்கு அமைதியைக் கொண்டுவருவார்,' ...

சினிமா தயாரிப்பில் உலகின் மையம� ...

சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம் ''சினிமா தயாரிப்பில் உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது'' ...

பிரதமர் மோடிக்கு பதில் ரஷ்யா செ ...

பிரதமர் மோடிக்கு பதில் ரஷ்யா செல்லும் ராஜ்நாத் சிங் ரஷ்யாவில் நடக்கும் இரண்டாம் உலகப்போர் வெற்றி விழா அணிவகுப்பில், ...

ராணுவத்திற்கு பின்னால் ஒவ்வொர� ...

ராணுவத்திற்கு பின்னால் ஒவ்வொரு குடிமகனும் இருப்பர்: அசாம் முதல்வர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டால், ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...