நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவகல்லூரி என்ற நிலை உருவாக்கப்படும் – அமித்ஷா

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நிலை உருவாக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.

ஹரியானா மாநிலம் ஹிசாரில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிலை திறப்பு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;

10 ஆண்டுகளில் அனைத்து துறைகளில் முன்னேற்றங்களை கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு கொண்டு வந்து, நடைமுறைப்படுத்தி உள்ளது, நாடு முழுவதும் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

10 ஆண்டுகளுக்கு முன்பாக நாடு முழுவதும் 7 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இதில் 6 கல்லூரிகள் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் உருவாக்கப்பட்டவை. தற்போது 23 எய்ம்ஸ் மருத்துவமனைகள் நாடு முழுவதும் உள்ளன.

தற்போது நாட்டில் 750 மாவட்டங்களில் 766 மருத்துவமனைகள் இருக்கின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற நிலை உருவாக்கப்படும்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் 4 கோடி வீடுகள் கட்டப்பட்டு, 20 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் அமித் ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...