இரத்த அழுத்த நோய்

 இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை :
பல்வேறு மாவு உணவுகள், எண்ணெயில் பொறித்தவை, முட்டை, பல்வேறு இறைச்சி வகைகள், ஊறுகாய் வகைகள், டின்னில் அடைக்கப்பட்ட உணவு வகைகள், உப்பு நிறைந்த பிஸ்கட் வகைகள்,
பிறகு, "ஸ்டீராய்டு" வகை மருந்துகள், ஆஸ்பிரின், பினைல்பூட்டோஷன் போன்ற மருந்துகள் உடலில் "சோடியத்"தின் அளவை நிலைபெறச் செய்வதால் அது அதிகமாகி இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

பொதுவாக உணவில் உப்புச் சத்தைக் குறைக்க வேண்டும். உலர்ந்த மீனான கருவாட்டில் அதிக அளவு உப்பு இருப்பதால் அதனையும் குறைத்து விடுவது நல்லது.

புரோட்டீன் :
இவர்கள் புரோட்டீன் உணவை ஓரளவு சேர்த்துக் கொள்ளலாம். இரத்த அழுத்தநோய் அதிகமாக இல்லாதபோது இவர்கள் தினமும் 40 முதல் 60 கிராம் வரை புரோட்டீன் உணவை உட்கொள்ளலாம். மிகவும் அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் 40 கிராம் வரை புரோட்டீன் உணவைச் சேர்த்துக் கொள்ளலாம்.

கொழுப்பு :
தினமும் 40 முதல் 50 கி வரை கொழுப்பு உணவைச் சேர்த்துக் கொள்ளலாம். மிகவும் அதிகமான அளவு கொழுப்பு உணவைச் சேர்த்துக் கொண்டால், இரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு இரத்த அழுத்தம் அதிகமாகும்.

கார்-போ-ஹைட்ரேட் :
கார்-போ-ஹைட்ரேட் மூலமாகத்தான் இவர்கள் உடல் வேலை செய்வதற்கு தேவையான சக்தியைப் பெற வேண்டும்.

கலோரி :
மிகவும் பருமனாகவும், தொந்தியாகவும் இருப்பவர்கள் மொத்த உணவின் அளவைக் குறைப்பதன் மூலம் தங்களுக்குக் கிடைக்கும் கலோரியின் அளவைக் குறைக்கலாம்.

உப்பு:
உணவில் சோடியம் மற்றும் உப்புச் சத்தின் அளவை ஓரளவு குறைக்கலாம். அதற்காக உப்பே போடாமல் சாப்பிட்டால் அதுவும் உடலிலும், இரத்த அழுத்தத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். புரோட்டீன் ஜீரணமாவதுடன் அதில் ஏற்படுகின்ற பல்வேறு இரசாயன மாற்றங்களால் ஏப்பம் ஏற்படும்.

வறுத்த கொழுப்பு உணவுகள் நீண்ட நேரம் வயிற்றில் அதிகமாக இருக்கின்ற போது அவை சிறுகுடலுக்குச் செல்லாமல் இருக்கின்ற படியால் அவை வயிற்றுப் பெருக்கத்தை ஏற்படுத்தி அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

மிகவும் பருமனாக இருப்பவர்களும், தொந்திக்காரர்களும் பொதுவாகச் சாப்பிடுகின்ற உணவின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது.

நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...