பாரதீய ஜனதா நாளுக்கு நாள் வலிமைபெற்று வருகிறது

 பாரதீய ஜனதா நாளுக்கு நாள் வலிமைபெற்று வருகிறது நரேந்திரமோடி அலையை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் வெங்கையா நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பாரதீய ஜனதா நாளுக்கு நாள் வலிமைபெற்று வருகிறது. இதனால் மற்றகட்சிகள் விரக்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளன. நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவாகவும். பா.ஜ.க.,வுக்கு ஆதரவாகவும் அலைவீசுகிறது. இதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது.

நாட்டு மக்களின் சிறப்பான எதிர் காலத்துக்காக வளர்ச்சி ஒன்றையே நோக்கமாக கொண்டு பாஜக பாடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சகாப்தமும், பரம்பரை ஆட்சி கலாசாரமும் இந்ததேர்தலுடன் முடிவுக்கு வரும்.

பா.ஜ.க பிராந்திய கட்சி அல்ல, தேசியகட்சி. எனவே ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவதோடு, தெலுங்கானா, சீமாந்திரா பகுதிகளின் மேம்பாட்டிலும் கவனம்செலுத்தும். பாஜக.,வால் மட்டுமே நிலையான, வலிமையான அரசை தரமுடியும் என்று மக்கள் நம்புகிறார்கள். நரேந்திர மோடியின் மூலம் இந்ததேசம் முன்னேற்றம் காணப்போகிறது.

பிராந்திய கட்சிகளுக்கு வாக்கு அளித்தால், அது காங்கிரசுக்கு உதவி செய்வதாகத் தான் அமையும். எனவே அந்த கட்சிகளுக்கு வாக்கு அளிப்பதால் எந்தபயனும் இல்லை.

பாஜக மீது காங்கிரஸ் தவறான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறது. தேர்தலில் நாங்கள் செலவிடும் பணம் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டபணம் ஆகும். செலவுவிவரம் பற்றி நாங்கள் தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கிறோம். தேர்தல் கமிஷனுக்கு மட்டும் தான் நாங்கள் பதில்சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு போன்ற பல்வேறு ஊழல்கள்மூலம் சட்டவிரோதமான வழிகளில் காங்கிரசுக்கு பணம் வந்துள்ளது. அந்தபணத்தை அவர்கள் தேர்தலில் செலவிடுகிறார்கள். ஆனால் பாஜக.,விடம் அப்படிப்பட்டபணம் எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் எங்களுடைய செயல்பாடு ஒளிவு மறைவற்றதாக உள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடிக்கும், தெலுங்கானா மற்றும் சீமாந்திராவிலும் தெலுங்குதேசம்–பாரதீய ஜனதா கூட்டணி வெற்றி பெறும் என்று வெங்கையா நாயுடு கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...