கழிப்பறைகள் பயன்பாட்டை நாட்டுமக்களிடையே பழக்கமாக மாற்றவேண்டும்

 கழிப்பறைகள் பயன்பாட்டை நாட்டுமக்களிடையே பழக்கமாக மாற்றுவதற்கான முயற்சிகளுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை தர வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அண்மையில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு சார்பில் நாடுமுழுவதும் "தூய்மை இந்தியா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தொடர்பாக மத்திய குடிநீர், துப்புரவுத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், "நம் நாட்டில் அதிகளவு கழிப்பறைகளை கட்டமைத்தால் மட்டுமே, 2019-ஆம் ஆண்டுக்குள் "தூய்மை இந்தியா' திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக மத்திய குடிநீர், துப்புரவுத்துறை அமைச்சகம் சார்பில் மாநில அரசுகளுக்கு அண்மையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. "கழிப்பறைகளைப் பயன் படுத்துவதை மக்கள் பழக்கமாகக் கொள்ளும் வகையில் அதற்கான முயற்சிகளுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை தர வேண்டும்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அத்துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், "மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தூய்மை இந்தியாதிட்டம் மூலம் கழிப்பறைகளை கட்டுவதன் அவசியம், அவற்றின் பயன்பாடு ஆகியவை தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தமுடியும். இது தவிர சுகாதார பணிகளில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தவும் மத்திய அரசு முடிவசெய்துள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஊடகங்களை பயன் படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, கழிப்பறைகளை மக்கள் பயன் படுத்துவதை பழக்கமாக மாற்றுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதற்குமுன்னுரிமை அளிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.

கடந்த மாதம் தில்லியில் நடைபெற்ற ஒருநிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், "நாட்டில் புதிதாக மூன்றுலட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டிருந்தாலும், அவற்றில் 10,000 மட்டுமே மக்கள் பயன்பாட்டில் உள்ளது. எஞ்சியுள்ள கழிப்பறைகளில் உரிய தண்ணீர்வசதி இல்லை. இதனால், அவற்றை மக்கள் வேறு செயல்களுக்குப் பயன் படுத்தி வருகின்றனர்' என்று வருத்தத்துடன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...