அறுசுவை உணவின் பயன்

 உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, காரம், புளிப்பு, உப்பு இந்த ஆறு சுவைகளிலும் உடலுக்குச் சக்தி அளிக்கும் தன்மை உண்டு.

கசப்பு:
உடல், எலும்பு மற்றும் நரம்பின் வலிமையால் இயங்குகிறது. உடலை இயக்குவதும், மனத்தின் எண்ண அலைகளை இயக்குவதும், மூளையை இயக்குவதும், நரம்புகள்தாம். உடலுக்கு ஏற்றவாறு நரம்பு பலம் உள்ளவர்கள் சுறுசுறுப்பாக இருப்பாகள்.

நரம்புக்குப் பலத்தைத் தருவது கசப்புச் சுவையே. உடலில் தேவையான அளவு கசப்புச் சுவை இருக்க வேண்டும். உடலின் எல்லா உறுப்புகளும் உறுதியடையப் பயன்படுவது கசப்புச் சுவையே ஆகும்.

நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் கடுகு, அளவான கசப்புச் சுவை உடையது. உடலிலுள்ள நச்சுத் தன்மையை நீக்கும் திறன் உள்ளது. அதனால்தான் நம் முன்னோர் முறையாக உணவில் பயன்படுத்தச் செய்தனர். உணவிற்குப்பின் சீரகம் கலந்த தண்ணீரைப் பயன்படுத்தினர். சீரகம் உடல் உள்ளுறுப்புகளுக்கு முறையாகச் சக்தியளிக்கிறது.

கசப்புச்சுவை உடலுக்கு நன்மை தரும் என்றாலும், அளவுடன்தான் உண்ண வேண்டும். உடலின் தேய்மான உறுப்புகளைப் புதுபிக்கும் ஆற்றல் கசப்புச் சுவைக்கு உண்டு.

சீரணத்துக்கு உதவியாய் இருக்கும். அத்துடன் கிருமிகளை அழித்து, எலும்பும் தசையும் உறுதியுடன் இருக்கவும், உடலைப் பாதுகாக்கும் பணியைச் செய்வதற்கும் உதவுகிறது. கசப்புச்சுவை குறைந்தால், செய்யும் பணியில் ஆர்வம் குறைந்து சோம்பல் உண்டாகும். அடிக்கடி தலைவலி, அத்துடன் உடல் வலிமைக் குறைவும் உண்டாகின்றன.

கசப்புச்சுவை அளவிற்கு அதிகமானால், அதிக உணர்ச்சி வசப்படுதல், சினம், தூக்கமின்மை, தோல் சம்பந்தமான ஊறல், அரிப்பு பிணிகள் உண்டாக்கும். கத்தரிக்காய் அளவுக்கு அதிகமாக உண்டால் கூடச் சிலருக்கு ஊறல், அரிப்பு உண்டாகும். அவர்கள் இளநீரை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

உடல் உயரத்திற்கேற்ற எடையைவிட, அதிக உடல் எடையினாலும், அளவுக்கு அதிகமான இரசாயன மருந்துகளைப் பயன்படுத்தினாலும், மற்றும் ஒவ்வாமையினாலும் தோல் சம்பந்தமான வியாதிகள் அன்புடன் விலகாமல் இருக்கும்.

கசப்புச்சுவை உள்ள எள், எள்எண்ணெய், கடுகு, கடுகெண்ணெய், கசகசா, ஓமம், சீரகம், பூண்டு, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி, தூதுவளைக் கீரை, வல்லாரைக் கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்காய், முருங்கைக் கீரை, கோவைக்காய், பாகற்காய், சுண்டைக்காய், பிஞ்சுக் கத்தரிக்காய், வேப்பம்பூ, ஆவாரம்பூ, கரிசலாங்கண்ணி, முடக்கத்தான் கீரை, முசுமுசுக்கை, வேப்பிலை ஆகியவற்றை அளவுடன் பயன்படுத்தலாம்.

நன்றி : வேலூர் மா.குணசேகரன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...