மனதை ஒருமைப்படுத்துதல்

 தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் நிற்க வேண்டும். வேறு எதிலும் சென்று சிதறக் கூடாது. சிலர் இயல்பாகவேப் பெற்றிருக்கலாம். மற்றவர்கள் முயன்று தான் வசப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிறுவயதிலேயே ஐந்து அல்லது ஆறு வயதுகளிலேயே, மனதை ஒரு பொருளில் ஊன்றிச் செலுத்தும் பயிற்சிகளைத் தொடங்குவது நல்லது. மனம் அப்போது வளைந்து கொடுக்கும். எளிதில் பழகிவிடும். பழக்கம் பின்னர் வழக்கமாகிவிடும். சிறு வயதைக் கடந்தவர்கள் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும். சிறிது சிறிதாகத் தான் வெற்றி பெற முடியும். தியானத்தில் மனதை நிலையாக ஊன்றவும் முடியும்.

மனம் ஈடுபாடு கொண்டு ஒன்றில் முழுமையாக ஒன்றும் போது தான் மனம் ஒருமைப்படும். மனதை ஒருமுகப்படுத்திப் பழகிவிட்டால், விரும்பும் எதனிடத்தும் அதை முழுமையாக ஒன்றும்படி செய்யலாம். முயற்சி, பயிற்சி செய்தால், உயர்ச்சி நிச்சயம்.

போர்க்களத்தில் எதிரியை வீழ்த்துவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தும் மாவீரன் எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் முன்னேறிச் செல்வான். இப்படிப்பட்ட ஒருமித்த கவனம் தியானத்தின் மீது செல்ல வேண்டும்.

தனது எண்ணம் சிதறல் இல்லாமல், மனம் ஒரே செயலிலோ, காட்சியிலோ குவிந்து விடுவது சில சமயங்களில் இயற்கையாகவே ஏற்படுவதும் உண்டு. நம்மையரியாமைய்யிலேயே ஒருமுகக் கவனம் ஏற்பட்டு விடும். அவர்கள் மனம் அதில் முழுமையாகக் கலந்துவிடுவதுதான் இதற்குக் காரணம்.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...