இந்தியாவில் சீன முதலீடுகள் அதிகரித்துள்ளதை வரவேற்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். சீன துணை அதிபர் லீ யுவான் சாவ் ஐந்து நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள அஜந்தா குகை, கொல்கத்தாவில் உள்ள ரவீந்திர நாத் தாகூர் இல்லம் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் மேற்கு வங்க மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி மற்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை சந்தித்துபேசினார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, சீன துணைஅதிபர் லி யுவான்சோ நேற்று சந்தித்து பேசினார். அப்போது, சீன அதிபர் ஜி ஜின் பிங் இந்தியாவிற்கு வந்துள்ளதையும், தான் சீனாவிற்கு சென்ற அனுபத்தையும் லி யுவான் சோவிடம் மோடி பகிர்ந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்தியாவில் சீன நாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதை வரவேற்பதாக பிரதமர் மோடி கூறினார். மேலும் இந்தியாவிற்கு வருகை தரும் சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.