தீவிரவாதத்துக்கு எதிராக ஒட்டு மொத்த மனித குலமும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்

 இந்தியா, அமெரிக்கா, ரஷியா, இங்கி லாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட 19 தனிப்பட்ட நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனை உறுப்புநாடுகளாக கொண்ட பொருளாதார அமைப்பு ‘ஜி-20’ ஆகும்.

இதன் உச்சிமாநாடு, துருக்கியில் ஆன்டல்யா நகரில், வரலாறு காணாத பாதுகாப்புக்கு மத்தியில் 2 நாட்கள் நடக்கிறது. இந்தமாநாடு நேற்று தொடங்கியது.

இங்கிலாந்து நாட்டில் 3 நாட்கள் அரசு முறை சுற்று பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு, ஆன்டல்யா போய்ச்சேர்ந்தார்.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

நாங்கள் எடுத்த துணிச்சலான சீர்திருத்த நடவடிக் கைகளால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது இன்னும் உயரவாய்ப்புள்ளது. இந்தியாவின் அளவை வைத்து பார்க்கும் போது, இந்நாடு உலகளாவிய வளர்ச்சி மற்றும் ஸ்திரத் தன்மையின் தூணாக மாற வாய்ப்புள்ளது.

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி உற்பத்தி திறனை 2022-ம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட்டாக உயர்த்த உறுதிபூண்டுள்ளோம். வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவதற்கு பல ஜி-20 நாடுகள் அதிக கட்டணம் விதிக்கின்றன. அந்தகட்டணத்தை குறைக்க வேண்டும். கருப்புபணத்தை ஒழிக்க ஜி-20 நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்.

தீவிரவாதத்துக்கு எதிராக ஒட்டு மொத்த மனித குலமும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதற்கு உலகளவில் அனைவரும் ஒன்றுபட்டு முயற்சி மேற்கொள்ளும் அவசரதேவை, இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டதில்லை. இதற்கு ‘பிரிக்ஸ்’ நாடுகள் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.