தீவிரவாதத்துக்கு எதிராக ஒட்டு மொத்த மனித குலமும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்

 இந்தியா, அமெரிக்கா, ரஷியா, இங்கி லாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட 19 தனிப்பட்ட நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனை உறுப்புநாடுகளாக கொண்ட பொருளாதார அமைப்பு ‘ஜி-20’ ஆகும்.

இதன் உச்சிமாநாடு, துருக்கியில் ஆன்டல்யா நகரில், வரலாறு காணாத பாதுகாப்புக்கு மத்தியில் 2 நாட்கள் நடக்கிறது. இந்தமாநாடு நேற்று தொடங்கியது.

இங்கிலாந்து நாட்டில் 3 நாட்கள் அரசு முறை சுற்று பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு, ஆன்டல்யா போய்ச்சேர்ந்தார்.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

நாங்கள் எடுத்த துணிச்சலான சீர்திருத்த நடவடிக் கைகளால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது இன்னும் உயரவாய்ப்புள்ளது. இந்தியாவின் அளவை வைத்து பார்க்கும் போது, இந்நாடு உலகளாவிய வளர்ச்சி மற்றும் ஸ்திரத் தன்மையின் தூணாக மாற வாய்ப்புள்ளது.

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி உற்பத்தி திறனை 2022-ம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட்டாக உயர்த்த உறுதிபூண்டுள்ளோம். வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவதற்கு பல ஜி-20 நாடுகள் அதிக கட்டணம் விதிக்கின்றன. அந்தகட்டணத்தை குறைக்க வேண்டும். கருப்புபணத்தை ஒழிக்க ஜி-20 நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்.

தீவிரவாதத்துக்கு எதிராக ஒட்டு மொத்த மனித குலமும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதற்கு உலகளவில் அனைவரும் ஒன்றுபட்டு முயற்சி மேற்கொள்ளும் அவசரதேவை, இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டதில்லை. இதற்கு ‘பிரிக்ஸ்’ நாடுகள் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...