விஜயகாந்தை பொருத்தவரை எந்த பக்கமும் போகமாட்டார்

மயிலாப்பூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் ஏற்பாட்டில் நிவராண உதவிகள் வழங்கப்பட்டது.

சுமார் ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 1 மாதமாக பாரதீய ஜனதா சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி செய்து உள்ளோம். நிவாரண பணிகளில் பா.ஜனதா முதல்நிலை வகிப்பதில் பெருமைபடுகிறோம்.

தமிழக வெள்ளசேதம் பற்றி அறிந்ததும் பிரதமர் மோடி நேரடியாகவந்து பார்த்ததுடன் ரூ.2 ஆயிரம்கோடி முதல் கட்டமாக ஒதுக்கினார்.

வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகட்டி தரப்படும் என்று வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கபடும் என்று அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். பாதிப்படைந்த தொழிற்சாலைகளை மறுசீரமைக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தன்ராஜ் மித்ரா அறிவித்து உள்ளார்.

சுங்கச் சாவடி கட்டணத்தை இலவசமாக்கியதன் மூலம் ரூ.60 கோடி உதவி செய்யப்பட்டுள்ளது. சமையல் சிலிண்டர்களை இழந்தவர் களுக்கு ரூ.200 கட்டணத்தில் சிலிண்டர் வழங்கப்படுகிறது.

சுகாதாரதுறை சார்பில் 7 பேர் கொண்டகுழு வருகிறது. பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு அதிகப்படியான அளவில் மத்திய அரசு உதவிசெய்து வருகிறது. நிவாரண நிதிகேட்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். எவ்வளவு அதிகமாக நிதி ஒதுக்க முடியுமோ அந்தளவுக்கு மத்திய அரசு ஒதுக்கும்.

ஜல்லிக் கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி முதல்–அமைச்சர் ஜெயலலிதா, திமுக. தலைவர் கருணாநிதி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பலமுறை பேசி ஒரு முடிவை நெருங்கி உள்ளோம். பேச்சுவார்த்தை விவரங்களை வெளியில் சொல்ல முடியாது. ஆனால் பேசப்பட்ட விதத்தை வைத்து கண்டிப்பாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று உறுதியாக சொல்ல முடியும்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை மக்கள் நலக்கூட்டணியினர் சந்தித்ததும், தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்து இருப்பதும் அரசியலில் நடப்பவைதான். ஒவ்வொரு கட்சிக்கும் ஒருகருத்து இருக்கும். ஆனால் விஜயகாந்தை பொருத்தவரை எந்த பக்கமும் போகமாட்டார். அவர் எங்கள் கூட்டணியில் தான் தற்போது இருக்கிறார் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...