மோடி வழங்கிய ராஜஸ்தானி தலைப்பாகை அணிந்து இனியாவை கௌரவித்த நவாஸ்

உலகநாடுகளை ஆச்சரியப்படுத்திய பிரதமர் மோடி-நவாஸ் சந்திப்பின் போது பல்வேறு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்தது. இதுசந்திப்பு  முடிந்த பின்னும் தொடர்ந்து வருகிறது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பேத்தி மெஹருன்னிசாவின் திருமணவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த வெள்ளிக் கிழமை லாகூரில் தரையிறங்கிய மோடியை உற்சாகத்துடன் வரவேற்ற நவாஸ், அங்கிருந்து அவரை ராவிண்ட் பகுதியில் உள்ள தனது பாரம்பரிய  வீட்டிற்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துசென்றார். வரலாற்றிலேயே இந்தியா பாகிஸ்தான் பிரதமர்கள் ஒன்றாக பயணம்செய்தது இதுவே முதல் முறை என பாகிஸ்தான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தனது குடும்ப உறுப்பினர்கள் பலரையும் மோடிக்கு நவாஸ்ஷெரிப் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது, “உங்கள் குடும்பத்தினர் அனைவரும் இங்கு தான் வசிக்கிறார்களா?” என்று ஆச்சர்யத்துடன் மோடி கேட்க,  “ஆமாம், 70-80 குடும்ப உறுப்பினர்கள் இந்தபெரிய வீட்டில்தான் வசிக்கின்றனர்.” என்றார் நவாஸ்.

பின்னர் நவாசின் அரண்மனை போன்ற வீட்டை சுற்றிப் பார்த்த மோடி, இங்கு நான் இனி அடிக்கடிவருவேன் என்று கூற, “தாராளமாக, இது உங்கள் வீடு, நீங்கள் எப்போது வேண்டு மானாலும் வரலாம்” என அக மகிழ்ச்சியுடன் நவாஸ் கூறினார்.

80 நிமிடங்கள்வரை நீடித்த இந்த சந்திப்பின்போது, நவாசின் தாயாரது காலைதொட்டு ஆசி பெற்ற மோடி, நவாஸ் ஷெரிப்பிடம் புடவைகள் உட்பட பல்வேறு பரிசுப் பொருட்களையும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று அங்கு வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. சவுதி உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த 2 ஆயிரம் விருந்தினர்கள் இந்தநிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரிப் பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்த இளஞ்சிவப்பு நிற ராஜஸ்தானி தலைப்பாகை அணிந்து கம்பீரமாக காட்சியளித்தார்.

மோடி பரிசளித்த தலைப் பாகையை உடனடியாக அணிந்துகொண்டது அண்டை நாடான இந்தியா மீது அவருக்கு உள்ள உண்மையான உள்ளன்பை வெளிப் படுத்துவதாக இருப்பதாகவும், இது மோடியின் மீது அவர் வைத்துள்ள மதிப்பை காட்டுவதாகவும் அவரது கட்சித்தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...