மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

 அருகம்புல்லும் வேரும்
உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும்.

அரசு
கர்பப்பை கோளாறு, மலட்டுத் தன்மை நீக்கும், சூட்டைக் குறைப்பது, சுரம்போக்கும், வீக்கம் குறைக்கும்.

 

அத்தி

மலமிளக்கி, காமம் பெருக்கு, நீரிழிவு, மூட்டுவலி, இரத்தமூலம் பெரும்பாடு.

அதிமதுரம்

காமாலை நோய், வெண்குஷ்டம், எலும்பு நோய், விக்கல், மார்புச்சளி, தும்மல், இருமல் போக்கும்.

அத்தி

மலச்சிக்கல், கால், மார்பு எரிச்சல், நீர்கடுப்பு அகற்றும்.

அமுக்ரா

அசதி, பசி இன்மை, முதுமை நீக்கம், காமம் பெருக்கும், சக்தி தரும்

ஆடாதொடை

இரத்தவாந்தி, சளிநோய், இசிவு நோய், கோழை இருமல், ஆஷ்துமா, சீதபேதி, இரத்த பேதி குணமாகும்.

அம்மான் பச்சரிசி

நமைச்சல், தாய்ப்பால் அதிகரிப்பு, வீக்கம், வயிற்றுவலி, சிறுநீரில் போகும் இரத்தம் குணமாகும்.

ஆடு தீண்டாப் பாளை

பலமும் விந்தும் உண்டாகும். மாதவிலக்கைத் தூண்டும், தோல் நோய், மலச்சிக்கல், பூச்சி விஷம் நீக்கும். புண்கள் ஆறும். வாதநோய் நீங்கும். ஆஷ்துமா அகலும்.

ஓரிதழ் தாமரை

காமம் பெருக்கும், சிறுநீர் எரிச்சல், சிற்றின்ப பலவீனம் நீங்கும். சுரம், தலைவலி, வெள்ளை வெட்டைச் சூடு நீங்கும்.

கடுக்காய்

மலச்சிக்கல், பல், கண், காது, மூக்கு தொண்டை நோய்கள், பசியின்மை இரத்த மூலம், ஆண்மை இன்மை, அசதி நீங்கும்.

கல்யாண முருங்கை

மாதவிடாய் கோளாறு நீங்கும், அதிக எடையைக் குறைக்கும்.

கழற்சிக்காய்

அண்டவாய்வு, விதைவீக்கம் குறைக்கும்.

கண்டங்கத்திரி

மார்புச்சளி, தொண்டை கரகரப்பு, நுரையீரல் நோய்கள், பல்வலி போகும்.

கீழாநெல்லி

காமாலை, ஈரல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி
உண்டாகும்.

குப்பை மேனி

மார்புச்சளி, தோல் நோய்கள் போக்கும்.

குமரி இலை

வெள்ளை, வெட்டை சூடு, மலச்சிக்கல் போக்கும். உடல் குளிர்ச்சி
உண்டாகும்.

கோரைக் கிழங்கு

புத்திக் கூர்மை, முடி பக்குவப்படும்.

வல்லாரை

உடல் வலுபெறும், புத்தக் கூர்மைப்படும், நீர் பெருக்கி, மேகப்புண், கட்டி வீக்கம், விரை வீக்கம், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

சிறு குறிஞ்சான்

சர்க்கரை நோய், குணமாகும். கிருமி நாசினியாகப் பயன்படும்.

மணத்தக்காளி

உடல் உரமாக்கும், கோழை அகற்றும், வாய்ப்புண், கடவாய்ப்புண், இருமல், வயிற்றுப்புண், பாண்டு, பெருவயிறு நீங்கும்.

துளசி

சளி, இருமல் நீங்கும், காய்ச்சல், பசி இன்மை, கோபம், வெறி, தூக்கமின்மை நீங்கும்.

பொடுதலை

தலைப் பொடுகு நீங்கும்.

தாமரை

மார்பு இதய நோய் போகும்.

தான்றிக்காய்

பல்நோய் போகும், மலச்சிக்கல் நீங்கும், உடல் பலம் பெரும்.

துத்தி

மூலம், புழுப்பட்டபுண் குணம்பெற மலமிளக்கி, சிறுநீர் பெருக்கி, காமம் உண்டாக்கும்.

தும்பை

கோழை அகற்றும், தலைவலி, அசதி, இருமல், வெள்ளை, தாகம், நஞ்சு நீக்கும்.

தூதுவளை

மார்புச்சளி, காசம், இருமல், இரைப்பு, உடல் குத்தல், மந்தம் நீக்கும், ஆண்மை பெருக்கும், நரம்பு வலுப்பெறும்.

நஞ்சறுப்பான்

எல்லாவித நஞ்சும் நீங்கும், சளி கக்குவான் இருமல், வாய்வு பிடிப்பு குணமாகும், பூரம், வீரம், எட்டி, பாதரச விஷங்கள் நீங்கும்.

நாயுருவி

பல்நோய், வியர்வை, படை, தேமல், இரத்தமூலம், பேதி, இருமல், வெள்ளை, சிறுநீர் சிக்கல், சூதகத் தடை நீங்கும்.

நாவல்

பேதி, சீதபேதி, இரத்த பேதி, மதுமேகம், அதிமூத்திரம் தீரும், நீரிழிவு நீங்கும்.

நீர் வேம்பு

சுரங்கள் நீங்கும், விஷம் நீங்கும், தோல்நோய் போகும்.

நீர்முள்ளி

நீர்க்கட்டு, கால்வீக்கம், பாண்டு, வெள்ளை உடல் அசதி, பெரு வயிறு, நீர் எரிச்சல் நீங்கும்.

நெரிஞ்சில்

குளிர்ச்சி உண்டாக்கும், சிறுநீர் பெருக்கும், காமம் பெருக்கும், சிறுநீர் கல்லடைப்பு, சிறுநீர் சதயடைப்பு, சிறுநீர் எரிச்சல் நீங்கும்.

நெல்லி

அழகுண்டாகும், குளிர்ச்சியாகும், மலமிளக்கும், சிறுநீர் பெருக்கும், வாந்தி, மயக்கம், தலைச்சுற்று, பிரமேகம் போகும்.

நொச்சி

கிருமி நாசினி, காய்ச்சல், குளிர்சுரம், வீக்கம், கீல்வாயு நீங்கும்.

நீர் பிரம்மி

மூளை வளர்ச்சியடையச் செய்யும், ஞாபக சக்தி உண்டாக்கும், காமம் பெருக்கும், கோழையகற்றும்.

பிரண்டை

உடல் உரமாக்கி, பசித்தூண்டி, மூலம் மந்தம், குன்மம், கழிச்சல், அஜீரணம், வயிற்றுவலி, இருமல், எலும்பு சக்தி பெறும்.

பூவரசு

உடல் உரமாக்கி, சொறி, சிரங்கு, கரப்பான் நீங்கும், கிருமி நாசினி, வீக்கம் நீங்கும், தோல் நோய் குணமாகும்.

பொன்னாங்கண்ணி

பசி உண்டாக்கும், கண்பார்வை கூட்டும், அழகு அதிகரிக்கும், எடை கூடும்.

மருதம்பட்டை

இரத்த அழுத்தம், நீரிழிவு, வெட்டை குணமாகும்.

மாவில்வம்

நீரிழிவு, கண்பார்வை மங்கல் குணமாகும்.

முசுமுசுக்கை

சளியைக் கரைக்கும், உடல் உரமாக்கும்.

முடக்கு அற்றான்

வாய்வு, இடுப்பு வலி, முழங்கால் வலி நீங்கும்.

முருங்கை

அதிக இரத்த அழுத்தம் குணமாகும், காமம் பெருக்கும், உடல் உரமாக்கும்.

மூக்கரட்டை

சிறு நீரகக் கோளாறு நீங்கும், கட்டி கரையும்.

வசம்பு

பசி உண்டாக்கும், இரத்தபித்தம், வாய் நாற்றம், சூலை, இருமல், ஈரல், யானைக்கால் நோய், நஞ்சு, நாடாப்புழு நீங்கும்.

வில்வம்

வியர்வை பெருக்கும், காமம் பெருக்கும், சுரம் நீங்கும் பெரும்பாடு, உடல்வலி நீங்கும்.

வேம்பு

புழுக்கொல்லி, பெருநோய், அம்மைப்புண், சொறிசிரங்கு,பித்தம், காமாலை, முற்றிலும் எல்லா நோய்களுக்கும் கொடுக்கலாம்.

கறிவேப்பிலை

இரும்புச் சத்து உள்ளது, பசித் தூண்டும், சீதபேதி, வயிற்றுளைச்சல் நீங்கும், முடிகறுக்கும்.

நன்றி : க.சிவநேசன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...